0
கணவன் - செல்லம் எந்திரிடா நம்பள பாக்க அப்பா அம்மா வந்திருக்காங்க...

மனைவி - (கடுப்புடன்) கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் வந்து ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள வந்துட்டாங்களா..? வா்றவங்க ஒரு போன் பண்ணிட்டாவது வரலாம்ல, இனி காலையில டிபன், மதியம் சாப்பாடுன்னு மூணு நேரமும் வடிச்சி கொட்றத்துகுள்ள என் உசுரு போயிடும்...

கணவன் - ஏய் கொஞ்சம் மெதுவா பேசு நீ பேசுறத கேட்டு கோவிச்சிகிட்டு அவங்க போயிடப் போறாங்க...

மனைவி - போனா போவட்டும் அப்டியாவது புத்தி வருதான்னு பாக்கலாம்...
(ஐந்து நிடங்கள் கழித்து)

கணவன் - உண்மையாலுமே அவங்க போயிட்டாங்கடி...

மனைவி - ஐயா, ஜாலி...

கணவன் - போறப்ப அத்தையையும் மாமாவையும் பாக்கவே ரோம்ப கஷ்டமா இருந்தது...

மனைவி - (சற்று அதிர்ச்சியுடன்) வந்தது எங்க அப்பா அம்மாவா..?

கணவன் - (மனசுக்குள் சிர்த்துக்கொண்டே) ஆமா..!

கருத்துரையிடுக Disqus

 
Top