திருச்சிராப்பள்ளி இனாம்குளத்தூர் புஹாரி மெஸ் 0 Place AM 10:50:00 Print this page as PDF, Print, Mail and Change Font size ---> திருச்சி மக்களின் மனதிலும், நாவிலும் நீங்காத இடம்பிடித்த பிரியாணி என்றால் அது காஜாமலை டிவிஎஸ் நகரில் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற இனாம்குளத்தூர் புஹாரி மெஸ்தான்.தேடி வந்து வாடிக்கையாளர்கள் பிரியாணியை சாப்பிட்டு விட்டு பார்சலும் வாங்கிச் செல்லும் ஓட்டலாக இது விளங்குகிறது. இதற்கு காரணம் குறித்து அறிய ஓட்டல் உரிமையாளர் ஹூமாயூன் அலியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது: தரம் தான் காரணம். மட்டன் பிரியாணியாக இருந்தாலும் சரி,சிக்கன் பிரியாணியாக இருந்தாலும் சரி அதற்கு தரமான பொருட்களை சேர்க்க வேண்டும். நெய், வெங்காயம், எண்ணை, அரிசி என அனைத்தும் முதல் தரத்தில் செய்கிறோம். அதே போல் மட்டன் வாங்கும் போதும் நேரில் சென்று தரமான எவ்வித கலப்பும் இன்றி கொள்முதல் செய்கிறோம். அதேபோல் சமைக்கும் போதும் சுத்தம் தான் முதலில் இருக்க வேண்டும். மசாலா பொருட்களை அன்றன்றைக்கு தயார் செய்கிறோம். கடையில் இருந்து வாங்கும் மசாலா பொருட்களையும் தரமானதாக வாங்குகிறோம். இதில் எவ்வித மாறுபட்ட கருத்தையும் கொள்வதில்லை. விலை கூடுதலாக இருந்தாலும் நாங்கள் அதற்காக கவலைப்படுவதில்லை. அதற்காக உணவு பொருட்களை விலை உயர்த்துவதில்லை. தேடி வரும் வாடிக்கையாளர்கள்தான் முக்கியம்.அரிசி களையவும், சமைக்கவும் தரமான குடிநீரையே உபயோகப்படுத்த வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறோம். இதனால்தான் எங்கள் ஓட்டலைத் தேடி வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சேர்க்கும் பொருட்கள் தரமாக இருப்பதுடன் நம் குடும்பத்தினருக்கு எப்படி சமைப்போமோ அந்த கவனத்துடன் பிரயாணியை சமைக்கிறோம் என இவ்வாறு அவர் கூறினார். இவர்களின் மற்றொரு ஓட்டல் திருச்சி திண்டுக்கல் ரோடு அம்மாபேட்டை ஜே.ஜே. கல்லூரி எதிரில் அமைந்துள்ளது. தரத்தை குறைவில்லாமல் தருவதால் புஹாரி மெஸ்சை தேடி வருகின்றனர் வாடிக்கையாளர்கள் என்பது அவருகளுக்கான பெருமையக அமைந்துள்ளது. சேர்க்கும் பொருட்கள் முதல் தண்ணீர் வரை தரமானதாகவும் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் செய்வதால் புஹாரி மெஸ் திருச்சி மக்களின் மனம் கவர்ந்துள்ளது. திருச்சிராப்பள்ளி இனாம்குளத்தூர் புஹாரி மெஸ் திருச்சி மக்களின் மனதிலும், நாவிலும் நீங்காத இடம்பிடித்த பிரியாணி என்றால் அது காஜாமலை டிவிஎஸ... மேலும் படிக்க »