0
உன்னை சுற்றும்
நட்சத்திரங்களில்
நானும் ஒருவன் தான்...

ஆனால் ......

எனக்கு தெரிந்த
ஒரே "நிலவு"
நீ மட்டும் தான்...!!



=====================================================================


நிலவுக்கும்
நிழல் இருப்பதை அறிந்தேன்
நீ என் முன்னால்
நடந்த போது...........

நிலவாய்
நீ............

நிழலாய்
நான்.............

=======================================================================



பன்னிரு நாட்கள்
ஒளிந்து ஒளிந்து
எனை பார்க்கிறாய்...

பின்னொரு நாளில்
முகம் காட்டி ....

முழு புன்னகைக்கு பின்

மெல்ல மெல்ல எனை
மறந்து போவதேன் ....

"நிலா-பெண்ணே"


=====================================================================

மாதத்தில் ஒரு நாள்
மறைந்து போவதால் உனை
மறந்து விட மாட்டேன்

நிலவே..!!

நீ

மறுமுறை வரும்வரை
காத்திருப்பேன்
கரையாத
காதலோடு...........!!

=======================================================================



காற்றில்
கருங்கூந்தல் தவழ...

காதோரம்
கம்மல்கள் மின்ன..

காலை வரை
கண்டு ரசித்திருந்தேன்..

கண் கொள்ளா
உன் "முக அழகை"...


"நிலவே" !!

காதலோடு
என் வீட்டு மாடியில் ( உன் மடியில்)
உறங்கையில்.......

கருத்துரையிடுக Disqus

 
Top