0
paalkoaa
தேவையான பொருள்கள்:
கெட்டியான பால் – 2 லிட்டர்
சர்க்கரை – 200 கிராம்
ஏலக்காய் – 4, 5
பச்சைக் கற்பூரம்.

செய்முறை:
  • காலையில் கறந்த பாலை மாலையில், அல்லது மாலையில் கறந்த பாலை மறுநாள் காலையோ (பாக்கெட் பாலை அப்படியே உபயோகிக்கலாம்.) செய்யலாம். கெட்டியான பாலை அடி கனமான வாணலியில் எடுத்துக் கொண்டு அடுப்பில் வைத்துக் காய்ச்ச ஆரம்பிக்கவும்.
  • காய்ந்ததும் பொங்கி வழிய விடாமல், அடிப் பிடிக்காமல், நிதானமான தீயில் அடிக்கடி கிளறிக் கொண்டே இருக்கவும்.
  • பால் இறுகி வற்ற ஆரம்பிக்கும்போது அடுப்பை சிம்’மில் வைத்து, அடிப்பிடிக்காமல் விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
  • நன்கு வற்றியதும் சர்க்கரை சேர்த்து, சர்க்கரையும் கரைந்து சேரும்வரை கிளறவும்.
  • சிறிதளவு மட்டுமே ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
* பாக்கெட் பாலாக இல்லாமல் கறந்த பாலாக இருந்தாலே மிகவும் ருசியாக இருக்கும்.
* கொஞ்சம் மேலே சொன்னபடி பழைய பாலாக இருந்தால் கிளறும்போது தானாகவே திரிதிரியாக வரும். புதிய பாலாக இருந்து, திரியாவிட்டால் சில சொட்டுகள் தயிர்விட்டால் சற்று திரிந்த மாதிரி வரும்.
* நல்ல க்ரீம் உள்ள பாலில் செய்தால், கிளறியதும் தானே நெய்யை கக்கும். அப்படி இல்லாமல் கையால் எடுத்துப் பார்த்து, கொஞ்சம் ஒட்டினால், மேலும் 2 அல்லது 3 டீஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறவும்.
* அடிப்பிடிக்காமலோ அதிகம் பொங்காமலோ இருக்க ஒரு நாணயத்தை அல்லது கோலிக் குண்டைப் போடலாம் என்று சொல்கிறார்கள். நான் போடவில்லை. நான்-ஸ்டிக்கில் செய்தேன்.
* பால்கோவா இறக்கும்போது சற்று தளர்வாக இருப்பது போல் பார்த்து இறக்கினால், ஆறியதும் இன்னும் இறுகி சரியான பதத்தில் இருக்கும். இறக்கும்போதே சரியான பதத்தில் இருந்தால், ஆறியதும் மிகவும் கெட்டியாகி உதிர ஆரம்பித்துவிடும். புகைப்படத்தில் இருப்பது இப்பொழுதுதான்அரை மணி நேரம் முன்னால், இறக்கியதும் எடுத்தது. [இந்த கோவாவை மட்டும் வைத்துக் கொண்டே இன்னும் சில இனிப்பு வகைகள் செய்யலாம். அவை அப்புறம்...]
* பொதுவாகவே இந்த மாதிரி பாலில் செய்யும் இனிப்புகளை சீக்கிரம் தீர்த்துவிடுவது அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிப்பது நல்லது.

கருத்துரையிடுக Disqus

 
Top