போடா வெண்ணெ என்று திட்டி பேசி கொள்வதை கேட்றிருப்போம் இந்த வெண்ணெய்யின் அர்த்தத்தை படிக்க நேர்ந்தது . வெண்ணெய் என்பது ஒரு ஊரின் பெயர் . “ திரு வெண்ணெய் நல்லூர் “ என்பது இதன் முழு பெயர் . இங்கு வாழ்ந்த பெருங்குண வள்ளல் சடையப்பர் . தஞ்சம் என்று வந்தோரை தாங்கி நிற்பதில் அவருக்கு ஒப்பாரும் இல்லை மிக்காரும் இல்லை . தமிழகமே அவரின் புகழை அறிந்திருக்கும் சடையப்ப்பரால் பெருமை பெற்றது வெண்ணைய் நல்லூர்
 
“ சடையன் வெண்ணெயில் தஞ்சம் 
என் றோர்களை தாங்கும் தன்மைபோல் .... “

அக்காலத்தில் யார் உதவி கேட்டு வந்தாலும் “ போம் ஐயா வெண்ணெய் “ என்பார்களாம் . அதாவது உதவி கேட்டு வருபவர்களை வெண்ணெய் நல்லூர் போங்க அங்கு சடையப்பர் உள்ளார் என்பார்களாம் .. “ போம் ஐயா வெண்ணெய் “ என்பதன் மெய் பொருள் மறந்து போய் விட்டது . பொருள் புரியாமலையே அந்த சொல்லாட்சி மட்டும் மருவி நிலைத்து விட்டது 

வெண்ணெய் நல்லுரை நினைத்து “ வெண்ணெய் “ என்னும் பெருமிதம் மிக்க சொல் , பொருள் தெரியாததால் இழிந்த சொல் போல் “ போடா வெண்ணெ “ என்று வழக்காறு பெற்றுள்ளது.......
 
Top