தேவையான பொருள்கள்:
பாகற்காய் – 1/4 கிலோ
கொத்துக்கடலை – ஒரு கைப்பிடி
புளி – சிறிய எலுமிச்சை அளவு
துவரம் பருப்பு – 1/4 கப்
தேங்காய் – 1/2 கப்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெல்லம் – சிறு கட்டி (விரும்பினால்)
வறுக்க:
எண்ணெய்
காய்ந்த மிளகாய் – 4
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
தனியா – 1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க: நல்லெண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை.
செய்முறை:
பாகற்காய் – 1/4 கிலோ
கொத்துக்கடலை – ஒரு கைப்பிடி
புளி – சிறிய எலுமிச்சை அளவு
துவரம் பருப்பு – 1/4 கப்
தேங்காய் – 1/2 கப்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெல்லம் – சிறு கட்டி (விரும்பினால்)
வறுக்க:
எண்ணெய்
காய்ந்த மிளகாய் – 4
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
தனியா – 1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க: நல்லெண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை.
செய்முறை:
-
வெள்ளைக் கொத்துக்கடலை அல்லது சிறிய அளவு கருப்புக் கொத்துக்கடலை உபயோகிக்கலாம். ஊறவைத்த கொத்துக்கடலை, துவரம் பருப்பை குக்கரில் நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.
-
பாகற்காயை முற்றலாக இருக்கும் குடல் பகுதிகளை நீக்கி, சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
-
புளியை நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும்.
-
2 டீஸ்பூன் எண்ணெயில், காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வெந்தயம், மிளகு, தனியா என்ற வரிசையில் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தேங்காயுடன் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
-
நறுக்கிய பாகற்காயுடன் வேகவைத்த கொத்துக்கடலை, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நிதானமான சூட்டில் புளிநீரில் வேகவைக்கவும்.
-
காய் வெந்ததும், வேகவைத்த துவரம் பருப்பு, அரைத்த விழுதைச் சேர்த்து சிம்மில் ஐந்து நிமிடங்கள் கொதிக்கவைக்கவும்.
-
விரும்பினால் வெல்லம் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு அடுப்பை அணைக்கவும்.
-
இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.
கருத்துரையிடுக Facebook Disqus