0

உங்கள் நிலங்களுக்கு உரிய வரியை (நன்செய் /புன் செய் அல்லது வீட்டு வரி ) செலுத்தி வருகிறீர்களா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.  இல் லை எனில் வேறு யாராவது உங்கள் நிலத்திற்கு தீர்வை செலுத்தி வந்தால், அதன்மூலம் கூட அவர்கள் நிலத்திற்கு சொந்தம் கொண்டாடும் உரிமை ஏற்பட்டு விடலாம் .
 
வரி சரியாக செலுத்தி ( சிட்டா ) கொண்டு இருந்தால் , அந்த நிலத்திற்கு பட்டா வாங்கி உள்ளீர்களா என்பதை நீங்கள் சரி பாருங்கள் .   சில பேர் நிலத்தை வேறு ஆட்களிடம் இருந்து வாங்கி இருப்பார்கள் . ஆனால் பட்டா மாற்றம் செய்து இருக்க மாட்டார்கள் .  பட்டா உங்களிடம் இல்லையா …? உடனே தாலுகா அலுவலகம் சென்று கணினி பட்டா ( உங்கள் நிலத்தின் சர்வே நம்பர் கொடுத்து ) வாங்குங்கள் . 
 
பட்டா ஏற்க்கனவே , நீங்கள் வாங்கி இருந்தால் அதன் மாற்றங்க ளை அவ்வப்பொழுது http://taluk. tn.nic.in/eservicesnew/home.html வலைத்தளத்தில் சரி பார்த்து கொள்ளுங்கள்.  மாற்றம் ஏதும் இருப்பின், உடனடிகவனம் தே வை .
 
சிலபேர் , பட்டாவை வாங்கி பார்த்தால், அந்த பட்டாவில் வேறு பயனாளிகள் பெயர் இருக்கும் . அப்படி இருந்தால் உடனடியாக பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.  அப்படி பெயர் மாற்றம் செய்யும் முன் EC என்று சொல்லப்படும் வில்லங்க சான்றிதழ் வாங்கவேண்டும் .
 
வில்லங்க சான்றிதழ் தாலுகா அலுவலகத்தில் கிடைக்காது. ஆனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் உங்கள் நிலத்தின் சர்வே நம்பர் எழுதி மனு கொடுக்கவேண்டும்.  அப்படி கொடுக்கும் பொழுது உங்கள் பத்திரத்தின் தேதிக்கு முந்தைய 10 வருடங்களில் இருந்து தற் பொழுதைய வருடம் வரைக்கும் வில்லங்கம் பார்ப்பது நல்லது .
 
வில்லங்க சான்றிதழ் எனப்படுவது உங்கள் நிலம்யாரால் யாருக்கு எந்த வருடம் எழுதி கொடுக்கப்பட்டது என்று அத்தனை விவரங்களும் உள்ளடக்கியதாக இருக்கும்.  உங்களுக்கு அந்த வில்லங்க சான்றிதழ் வாங்கிய பிறகு, உங்கள் பத்திர பதிவு நாளுக்கு பிறகு ஏதாவது பரிமாற்றம் உண்டாகி இருக்குமானால் அந்த பத்திரத்தின் நகலையும் நீங்கள் அந்த அலுவலகத்தில் தனியாக மனு கொடுத்து பெற்று கொள்ளலாம் .
 
வில்லங்க சான்றிதழ் உங்க ளின் பரிவர்தனையோடு முடிந்தது என்றால், நீங்கள் அந்த நகலை கொண்டு உங்கள் பட்டாவின் பெயர் மாற் றத்திற்கு மனு கொடுக்கலா ம் .
 
 ஒருவேளை உங்கள் காலம் சென்ற தந்தையார் நிலம் உங்கள் பெயர்க்கு மாற்றம் செய்யப் படவேண்டும் எனில் உங்கள் தந்தை யாரின் இறப்பு சான்றிதழ் மற்றும் உங்கள் தந்தைக்கு வாரிசு சான்றிதழ் பெற்று அவைகளின் மூலம் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றம் செய்யலாம் .
 
கூடிய மட்டும் உங்களின் நிலங்களை வேலி அடைத்து பாதுகாப்பது நல்லது . 

உங்கள் நிலங்களின் சர்வே நம்பர் மற்றும் அளவுகளை ஏதாவது புத் தகத்தில் தொகுத்து வைத்து இருந்தால், அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுப்ப தற்கு நலமாக இருக்கும் .  சில வீடுகளில் பிள்ளைகள் நிலம் எங்கே என்று தெரியாமல் நிற்பதும் வேடிக்கைதான் .

கருத்துரையிடுக Disqus

 
Top