Latest News

0
ஒரு விவசாயி தன்னோட பண்ணையில 25 கோழியும் 1 சேவலும் வளர்த்துகிட்டு இருந்தாரு. சேவலுக்கு வயசாயிடிச்சுன்னு புது சேவல் ஒண்ணு வாங்குனாறு.

புதுசா வந்த சேவல் கிட்ட பழைய சேவல் "வா பங்காளி இனிமே ரெண்டு பேரும் சேர்ந்து உற்பத்திய அதிகப்படுத்தலாம்" அப்பிடின்னுச்சு

புது சேவலோ "உனக்கு வயசாயிடுச்சு, அதனால எனக்கு வழிய விட்டுட்டு நீ ரிட்டையர் ஆயிடு" ன்னு திமிரா சொல்லுச்சு

"இங்க 25 கோழிகள் இருக்கு எல்லாத்தையும் உன்னால சமாளிக்க முடியுமா"  பழைய சேவல் கேட்டுச்சு

"எல்லாத்தையும் நானே பார்த்துகிறேன் உன் உதவி தேவை இல்லை" புது சேவல் சொல்லுச்சு

"உன் திறமைக்கு ஒரு சவால் அதுல நீ ஜெயிச்சுட்டா நீ சமாளிச்சுடுவேன்னு நான் ஒத்துக்கிறேன் அப்பிடியே நான் ஒதுங்கிக்கிறேன்" இது பழைய சேவல்

"என்ன செய்யணும்"

"உனக்கும் எனக்கும் ஓட்டப்பந்தயம் வைப்போம், அதுல தெரிஞ்சுடும்"

"சரி"

"ஒரு கண்டிஷன்"

"என்ன?"

"எனக்கு வயசாயிடுச்சு அதனால நான் ஒரு 10 மீட்டர் முன்னால நின்னுக்குவேன் சரியா?"

"சரி எதுவும் பிரச்சனை இல்லை போட்டியில நீ தோத்துட்டா நீ சொன்ன மாதிரி என் வழிக்கு வரக்கூடாது எல்லா கோழியும் என்னோடது"

"சரி நாளைக்கு காலையில போட்டிய வச்சுக்கலாம்"

மறுநாள், போட்டி ஆரம்பம் ஆச்சு பழைய சேவல் சொன்ன மாதிரி 10 மீட்டர் முன்னாடி நின்னுக்கிச்சு. 

புது சேவல் தெம்பை எல்லாம் தெரட்டி ஓட்டம் பழைய சேவலை முந்த போற நேரம்

"டுமீல்" -  ன்னு சத்தம்.   புது சேவலை விவசாயி சுட்டுட்டார்,

இதுக்கு எது சேவல் எது கோழின்னே தெரியலையேன்னு இதை வச்சு என்ன பண்றதுன்னு சலிச்சுக்கிட்டாரு. 

நீதி : மூளை உலகில் மிகச்சிறந்த ஆயுதம் .

கருத்துரையிடுக Disqus

 
Top