பிள்ளைகளுக்கும் எதுக்கு அடி வாங்குகிறோம் என்று அவர்களுக்கு தெரியாது. வெளிநாட்டில் உள்ள கணவரிடமிருந்து வரும் போன் அன்று வரலையா உடனே கிடைத்தது பிள்ளைகள் காரணமே இல்லாமல் சாத்து சாத்துன்னு சாத்தரது, அந்த ஆளு அங்கு சொகுசா ஜாலியா இருக்காரு, இதுங்கல கட்டி நான் மேய்க்க வேண்டியாதா போச்சு ஒரு நிம்மதி கிடையாது..என்று பொலம்ப ஆரம்பித்து விடுவார்கள்.
ரொம்ப கோபப்படுபவரிடம் ரொம்ப கோபப்பட்டா தோல் சுருங்கி சீக்கிரம் வயதான தோற்றம் வந்து கிழவி போல் ஆகி விடுவீர்கள் என்று சொல்லி பாருங்கள், அடுத்ததடவை கோபப்படும் போது கொஞ்சம் யோசிப்பார்கள். சில பெண்கள் டென்ஷனை போக்க அரிசி, அவல், மாவு எடுத்து எந்த நேரமும் சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள்.
சில பேர் நகத்தை நறு நறு வென கடித்து கொண்டு இருப்பார்கள். நகம் தீர்ந்து ரத்தம் வருவது கூட தெரியாமல் இருப்பார்கள். இப்படி கோபப்படுவதால் உஙகளுக்கு சிறு வயதிலேயே பீபீ எகுறும் நிலைக்கு கொண்டு போய் விடும். இல்லை லோ பீபீ ஆகி அடிக்கடி மயக்கம் வரும். வீட்டில் மயக்கம் போட்டு விழுந்தால் பரவாயில்லை தனியாக எங்கும் வெளியில் செல்லும் போது மயக்கம் போட்டு விழுந்தால் உங்கள் நிலையை கொஞ்சம் நினைத்து பாருங்கள்.
ஹார்ட் அட்டாக்கே வரலாம். கோபபட்டு எதையும் சாதிக்க போவதில்லை வீண் மனஸ்தாபத்தை தான் விலைக்கு வாங்கி கொள்ளனும்.. பொறுமையை கையாளுங்கள் கோபத்தை தவிருங்கள். . இப்படிபட்ட கோபத்தை தவிர்க்க எவ்வளோ நல்ல விஷயங்கள் இருக்கு அதில் நம்மை திசை திருப்பலாம். துணி தைப்பது, விதவிதமாக ஆர்ட் வொர்க் செய்வது, வித விதமாக சமைப்பது, பிடித்த இசை கேட்பது, இது போல் நம்மை நாமே பார்த்துகொண்டால் கோபப்பட நேரம் கூட இருக்காது.
இன்னும் உங்க கோபம் போகலையா ... அப்படியே கொஞ்சம் இந்த பக்கத்தின் கீழ பாருங்கள் யார் மேல கோபமோ அவர் பெயர டைப் செஞ்சு உங்க கோபம் போறவரைக்கும் செமையாஅடிங்க கடைசில அவருக்கு மருந்து குடுங்க அந்த அடிவாங்குன அப்பாவி முகத்த பதிங்க்கன எல்லா கோபமும் போய்டும்