ஊஞ்சலாடுவது சிறுவர்களுக்கே உரிய அம்சம் என்று நினைத்திருப்போம், மனதுக்கு ஆறுதல் தரும் தியானம் போல ஊஞ்சலாடுவதும் ஒரு சுகம்தான்! அதற்காக சிறுவர்களின் ஊஞ்சலில் ஆட முடியாதே .. விஷயத்துக்கு வருவோம் போர்த்துகல்லில் அமைந்துள்ள International Centre for the Arts எனும் கழகத்தில் ஊஞ்சல் போன்ற அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது, ஒரே நேரத்தில் வரிசையாக பலர் அமர்ந்து ஆடலாம்.

நாம் ஊஞ்சல் ஆடும் போது பெறப்படும் அசைவை வைத்து மின்சாரம் பிறப்பிக்கப்படுகிறது என்பதுதான் இங்கு சிறப்பான விடயம். ஒவ்வொரு ஊஞ்சலும் சைக்கிள் சில்லுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆடும் போது சில்லு சுழலும், மிக எளிமையான விஞ்ஞானம், இன்றைய காலத்திற்கு பயனுள்ள கண்டுபிடிப்பு.









 
Top