மின் உற்பத்தியை அதிகரிக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் புதிதாக ஒரு நடவடிக்கை எடுக்கப்போகிறது. அதாவது சோலார் எனப்படும் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவியின் மாதிரியைக்கொண்ட பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படுமாம்.

இந்த சோலார் பேருந்து நிறுத்தங்களில் மொபைல் போன்களுக்கு பேட்டரியை நிரப்ப பயன்படும்வகையில் “சார்ஜிங் பாய்ண்ட்ஸ்” என்ற அமைப்பும் ஏற்படுத்தப்படவுள்ளது.

தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில் “சென்னை மாநகரில் உள்ள பல்வேறு பேருந்து நிறுத்தங்களில் 20க்கும் மேற்பட்ட ஒளிரும் சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றால் அதிக அளவு மின்சாரம் வீனாகிறது. பேருந்து நிறுத்தங்களின் தேவையை பூர்த்தி செய்யவும், மின் உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும் தான் இந்த புதிய நடவடிக்கை” என்றார் அவர்.

எது எப்படியோ மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தால் நல்லதே!

பின்வரும் புகைப்படங்கள் வெளிநாடுகளில் பயன்படுத்தும் சோலார் பேருந்து நிறுத்தங்களின் மாதிரிகள்:
Related Posts Plugin for WordPress, Blogger...
 
Top