மசாஜ் செய்வதற்கு எந்த எண்ணெய் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால் சில எண்ணெய் வகைகள் உடல் அசதி, வலி போன்றவற்றை போக்குவதில் மிகுந்த திறன் கொண்டவையாக இருக்கிறது. எல்லாவிதமான எண்ணெயிலும் பல நன்மைகள் உண்டு. ஆனால் எல்லா சந்தர்ப்பங்களிலும் அவற்றை உபயோகிக்க முடியாது. சரி, இப்பொழுது மசாஜ் எண்ணெய்களைத் தேர்ந்தெடுப்பதில் சில வழிமுறைகளைக் காண்போமா!!!
1.முதலில் எந்த விதமான மசாஜை செய்யப் போகிறோம் என்பதை தீர்மானிக்க வேண்டும். ஆலிவ் போன்ற எண்ணெய் வகைகள் குறைந்த அளவு மசாஜ் செய்தாலே சிறந்த பலனளிக்கும். இந்த எண்ணெய்கள் வழுக்கும் தன்மை அதிகம் பெற்றுள்ளதால், தோலினால் விரைவாக உறிஞ்சப்படுவதில்லை. திராட்சை விதை எண்ணெய், க்ரீம் போன்றவை குறைந்த அழுத்தத்தோடு கூடிய மசாஜிக்கு ஏற்றதாக அமைகிறது. இந்த வகை எண்ணெய்கள் தோலினால் சீக்கிரம் உறிஞ்சப்படுவதால், தோல் எரிச்சலை தடுக்கும்.
2. மசாஜ் செய்ய உகந்த நேரத்தையும், இடத்தையும் கட்டாயம் கருத்தில் கொள்ள வேண்டும்.
3. தனிப்பட்ட விருப்பங்களைப் பார்க்கவும். மணம் மிகுந்த மசாஜ் எண்ணெயால் செய்யப்படும் அரோமாதெரபியின் நன்மைகளை சிலர் விரும்புவர். ஆனால் சிலரோ மணம் மிகுந்த எண்ணெய் வகைகளை விரும்ப மாட்டார்கள். மற்றும் சிலருக்கோ வலுவான நறுமணத்தால் ஒவ்வாமை ஏற்படலாம். ஒரு தொழில் பயன்பாட்டிற்காக எண்ணெய்யை தேர்வு செய்தால், வாசனையற்ற எண்ணெய்களை தேர்வு செய்வது நல்லது. இதுவே தனிப்பட்ட பயன்பாட்டிற்காக எண்ணெயை தேர்வு செய்ய விரும்பினால், பிடித்த நறுமணத்துடன் கூடியதை தேர்வு செய்யலாம்.
4. எண்ணெயால் வரும் ஒவ்வாமையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். சிலருக்கு நறுமணத்தால் வரும் ஒவ்வாமை போக, குறிப்பிட்ட பூக்கள் மற்றும் கொட்டைகளிலிருந்து இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயால் ஒவ்வாமை ஏற்படலாம். ஒவ்வாமை விஷயத்தில் அக்கறை கொண்டிருந்தால், அவை ஏற்படாத வண்ணம் எண்ணெய்களை தேர்வு செய்ய வேண்டும்.
5. எப்பொழுதும் சிகிச்சைக்குப் பின் வரும் பயனை கருத்தில் கொண்டு மசாஜ் எண்ணெய்களை வாங்க வேண்டும். சில எண்ணெய்கள் பச்சைக் கற்பூரம் மற்றும் பல்வேறு சாறுகள் மூலம் தயாரிக்கப்படுகின்றன. இதனால் எரிச்சலும், வலியும் குறையும் வாய்ப்பு ஏற்படும்.
கருத்துரையிடுக Facebook Disqus