இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி பிரையன் ஜே. போர்டு, டைனோசர்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பேராசிரியரான இவர், பி.பி.சி. வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது டைனோசர்கள் குறித்து தனது கருத்தை வெளியிட்டார்.
அவர் கூறுகையில், ‘மிகப் பெரிய உருவம் கொண்ட, நீண்ட வாலை உடைய டைனோசர்கள் பூமியில் சுற்றித் திரிந்து அதன் இரையைத் தேடுவது என்பது அதற்கு சிரமமானது. அது சாத்தியமற்றது. டைனோசரின் வால், நீரில் நீந்துவதற்கும், மிதந்தபடியே செல்வதற்கும் ஏற்ற வகையில் உள்ளது. மேலும் நீந்துவதற்கு அது உறுதுணை புரிந்திருக்கிறது’ என்றார்.