வட இந்தியாவில் ரொட்டி அல்லது சப்பாத்தி எனப்படும் உணவு வகையானது பிரதான உணவாக காணப்படுகிறது. மாவில் செய்யப்படுகின்ற இந்த உணவுக்கு அப்பகுதிகளில் பெரும் கிராக்கி உண்டு என்பதற்கு இந்தியாவுக்கு சென்று வந்த மேலைத்தேய நாட்டவர்களுக்கு கூட புரிந்த உண்மை.  அவர்களிடம் கேட்டால் சப்பாத்தியின் சுவையே ஒரு தனி ரகம் என்கிறார்கள். இவ்வாறே சப்பாத்தி உண்ணும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளது ஒரு குழந்தை.

குழந்தைகள் பெரும்பாலும் என்னென்ன உணவுகள் விரும்பி உண்ணும் எந்தளவிற்கு உண்ணும் என்பதற்கு விதிவிலக்கா இந்தியாவில் வெறும் ஒன்றரை வருடங்களே ஆன சிறுவன் சப்பாத்தியை விரும்பி உண்டு வருகிறான். இதில் என்ன ஆச்சரியம் என்றால் வெறும் ஒன்றரை வருடங்களே ஆன அந்த குழந்தை தினமும் 20 ரொட்டிகளை உண்ணுகிறான் என்பதே அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் செய்தி.  அளவுக்கு மிஞ்சினால் உணவு கூட நஞ்சுதான். எனவே இந்த குழந்தையின் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டியது பெற்றோரின் கடமையாகிறது.


 
Top