0
ஒரே தெரு என்பதால்
அவ்வப்போது சந்திக்கும் எம் விழிகள்..,
பதிலுக்கு புன்னகைத்து செல்வாள்..
கால மாற்றத்தில்
இது காதலானது என்னுள்!

தினமும்
அவள் பாதம் சுமந்து
தாங்கி நிற்கும் தெருவை
விழிகளாலே உள்வாங்கியிருப்பேன்..


சில சமயங்களில்
அவளின் எதேச்சையாக
என் மீதான பார்வை
எனக்குள் ஏற்படும் மாற்றங்கள்
சொல்லி அடங்கா..

என் டயரி பக்கங்கள்
அவள் பெயராலும்,
நினைவுகளிலும்
கனவுகளிலும்
அவளுடன் நான் வாழும்
வாழ்க்கையாலும்
நிரம்பி கிடந்தது...

காத்திருந்து காலங்கள் கடக்க,
சில சமயங்களில்
கதைக்க முயன்று
தோற்றுப்போனேன் அவளிடம் ! 
நேர் விழியாக காணும் போதே
நான் பேச்சிழந்துவிடுகிறேன்..

தைரியம் இல்லாதவனாக
செல்பேசி  எண்ணை
கொடுத்து, அவளின்
சொல்லாத காதலுக்காய்
செல்போனை பாத்திருக்க..

திடீரென ஒலித்த அழைப்பு மணியில்
"ஹலோ" என்ற  மறுமுனையில்
அவள் காந்தர்வ குரல்..,
சிறிது நேரம் என்னையே மறந்த நான் ..
"உங்களை நான் சந்திக்க வேண்டும்
நாளை!".., என்றவள்  சொல்லி முடிக்க
விழிப்புக்கு வந்தவனாக...

அந்தரத்தில்  பறப்பதை
அன்று தான் முதல் முறை உணர்ந்தேன்..

அன்றைய நாள் இரவில்
என் விழிகள்
இமை மூட முன்னரே
அடுத்த நாள்
அதிகாலையும் விடிந்தது..

அவளுக்காய்..
இருமணி நேரம் முன்..,
காதல் கைகூட போகிறதே என்ற
எதிர்பார்ப்பும் மகிழ்ச்சியுமாக
சொன்ன இடத்தில் சென்று
தவமிருக்க
அவள் வருகிறாள் 
தன் காதலனுடன்..!

கருத்துரையிடுக Disqus

 
Top