மக்களின் நுகர்வுக்கு தேவையான மின்சக்தியை பல்வேறு நாடுகளும் பல முறைகளில் உற்பத்தி செய்து வருகின்றன.
இதில் சூரிய சக்தி மூலமான மின் உற்பத்திக்கே அனேகமான நாடுகள் சமீப காலமாக முக்கியத்துவம் கொடுத்துவருகின்றன.
இவ்வாறான நிலையில் சூரிய சக்தியையும், ஹைட்ரஜனையும் இணைத்து
மின்சக்தியை உருவாக்கும் முயற்சியில் Purdue பல்கலைக்கழகம் மற்றும்
சுவிட்சர்லாந்தின் பெடரல் பாலிடெக்னிக் பாடசாலையை சேர்ந்த விஞ்ஞானிகள்
முயற்சி செய்துவருகின்றனர்.
'Hydricity' எனும் இப்புதிய முறை மூலம் சூழலுக்கு இயைபாக்கமான
முறையில் 24 மணி நேரமும் மின்சக்தியை உற்பத்திசெய்யக்கூடியதாக இருக்கும் என
குறித்த ஆராய்ச்சியாளர் குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
கருத்துரையிடுக Facebook Disqus