0

 


முறையான முதலீட்டுத் திட்டம் அல்லது எஸ்ஐபி என்பது மியூச்சுவல் ஃபண்டு மூலம் செய்யப்படும் ஒரு சாமர்த்தியமான மற்றும் சிக்கல்கள் இல்லாத பணத்தை முதலீடு செய்யும் முறையாகும்.

எஸ்ஐபி (SIP) உங்களை ஒரு குறிப்பிட்ட முன் கூட்டித் தீர்மானிக்கப்பட்ட தொகையை வழக்கமான இடைவெளிகளில் முதலீடு செய்ய அனுமதிக்கிறது. (வாராந்திர, மாதாந்திர, காலாண்டு, மற்றும் பல...). எஸ்ஐபி (SIP) என்பது முதலீடுகளை நோக்கிய ஒரு திட்டமிட்ட அணுகுமுறை மற்றும் இது சேமிக்கும் பழக்கத்தை உங்கள் மனதில் ஆழப் பதிய வைத்துக் கற்பிக்கவும் மற்றும் வருங்காலத்திற்கான செல்வ வளத்தைக் கட்டுமானிக்கவும் உதவுகிறது.

அது எப்படி வேலை செய்கிறது?
எஸ்ஐபி என்பது ஒரு நெகிழ்த்தன்மை உடைய மற்றும் எளிதான முதலீட்டுத் திட்டமாகும்.

உங்கள் பணம் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து தானியங்கியாகக் கழிக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட பரஸ்பர நிதி முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யப்படுகிறது. 
 
முதலீடு துவங்கிய நாளின் தற்போதைய சந்தை விலை நிலவரத்தை (NAV அல்லது நிகரச் சொத்திருப்பு மதிப்பு என்று அழைக்கப்படுகிறது) அடிப்படையாகக் கொண்டு உங்களுக்குச் சில குறிப்பிட்ட எண்ணிக்கை அலகுகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
கூடுதல் அலகுகள் எப்படிச் சேர்க்கப்படுகின்றது ஒவ்வொரு முறை நீங்கள் பணத்தை முதலீடு செய்யும் போதும், சந்தை விலை நிலவரப்படி அத்திட்டத்தின் கூடுதல் அலகுகள் வாங்கப்பட்டு உங்கள் கணக்கில் சேர்க்கப்படுகிறது. எனவே அலகுகள் வெவ்வேறு விலைகளில் வாங்கப்படுவதால் முதலீட்டாளர்கள் ரூபாய் - மதிப்பீட்டுச் சராசரி மற்றும் வட்டி கூட்டுத் தொகையாக்கத்தின் ஆற்றலால் பயன் பெறுவர்.
ரூபாய் மதிப்புச் சராசரியாக்கம்.நிலைப்புத்தன்மையற்ற சந்தைகளால், பெரும்பான்மையான முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கேற்ற சிறந்த நேரம் பற்றிச் சந்தேகத்துடனிருக்கிறார்கள் மற்றும் சந்தையில் அவர்கள் நுழைவதற்கான நேரம் பார்த்து முயற்சிக்கிறார்கள். ரூபாய் மதிப்புச் சராசரியாக்கம் உங்களை இந்த ஊகிக்கும் விளையாட்டிலிருந்து வெளியேற அனுமதிக்கிறது.

நீங்கள் ஒரு வழக்கமான முதலீட்டாளராக இருப்பதால், உங்கள் பணம் விலை குறைவாக இருக்கும் போது அதிக அலகுகளையும் விலை அதிகமாக இருக்கும் போது குறைந்த அலகுகளையும் ஈட்டித் தரும்.

நிலைப்புத்தன்மையற்ற காலங்களின் போது, உங்களை ஒரு அலகுக்குக் குறைந்த சராசரி விலையைப் சாதிக்க அனுமதிக்கிறது.

வட்டி கூட்டுத் தொகையாக்கம்ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒருமுறை சொன்னார், 'கூட்டு வட்டி உலகின் எட்டாவது அதிசயமாகும். அதை யார் புரிந்து கொள்கிறார்களோ, அவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள், யார் புரிந்து கொள்ளவில்லையோ., அவர்கள் பணம் செலுத்துகிறார்கள்.' கூட்டு தொகையாக்கத்திற்கான விதிகள் எளிமையானவை - நீங்கள் எவ்வளவு சீக்கிரம் முதலீட்டைத் தொடங்குகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் பணம் வளரும்.
எடுத்துக்காட்டுநீங்கள் ஒரு மாதத்திற்கு ரூ. 10000 முதலீடு செய்யத் தொடங்கியிருந்தால் 20 வருட காலத்தில் உங்கள் 40 வது பிறந்த நாளில், நீங்கள் ரூ. 24 இலட்சங்களைத் தனியாக எடுத்து வைக்க முடியும். அந்த முதலீடானது ஒரு வருடத்திற்குச் சராசரியாக 7% வளர்ந்தால், நீங்கள் 60 வயதை அடையும் போது அது ரூ. 52.4 இலட்சங்களாக மதிப்படைந்திருக்கும்.

எனினும், நீங்கள் 10 வருடங்களுக்கு முன்பாகவே முதலீடு செய்வதைத் தொடங்கியிருந்தால், ஒவ்வொரு மாதமும் உங்கள் ரூ. 10000, 30 வருடங்களில் ரூ. 36 இலட்சமாகச் சேர்க்கப்பட்டிருக்கும். அதே வருடாந்திர வளர்ச்சியான 7% சராசரி என்று அனுமானித்தால், உங்களது 60 வது பிறந்த நாளில் நீங்கள் 1.22 கோடி ரூபாயைப் பெறுவீர்கள் - நீங்கள் பத்து வருடங்கள் கழித்துத் தொடங்கியிருந்தால் இரட்டிப்பை விட அதிகமான தொகையை நீங்கள் பெறுவீர்கள்.
ஒழுக்கமான சேமிப்புவெற்றிகரமான முதலீடுகளுக்கு ஒழுக்கமே திறவுகோல் ஆகும். நீங்கள் எஸ்ஐபி (SIP) வழியாக முதலீடு செய்யும் போது, நீங்கள் வழக்கமான சேமிப்பில் உங்களை ஈடுபடுத்திக் கொள்கிறீர்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு முதலீடும் உங்கள் நிதி குறிக்கோள்களை அடைவதை நோக்கி எடுத்து வைக்கும் அடியாகும்.
நெகிழ்வுத்தன்மைநீண்ட காலத் தொலைநோக்கு கண்ணோட்டத்துடன் சிப் முதலீடுகளில் தொடர அறிவுறுத்தப்படும் அதே வேளையில், அங்கே கட்டாயம் ஏதும் இல்லை. முதலீட்டாளர்கள் எந்த நேரத்திலும் திட்டத்திலிருந்து இடையிலேயே நிறுத்திக் கொள்ளலாம். மேலும் ஒருவர் முதலீடு செய்யப்படும் தொகையை அதிகரிக்கலாம் / குறைத்துக் கொள்ளலாம்.
நீண்ட கால ஆதாயங்கள்பண மதிப்பீட்டுச் சராசரியாக்கம் மற்றும் கூட்டுத் தொகையாக்க திறனின் காரணமாக நீண்ட கால முதலீட்டுத் தொடுவரைகளில் ஈர்க்கக்கூடிய வரவுகளை வழங்கும் உள்ளார்ந்த ஆற்றல் எஸ்ஐபி (SIP) யிடம் உள்ளது.
சௌகரியம்எஸ்ஐபி (SIP) ஒரு சிக்கல்களற்ற முதலீட்டு முறையாகும். உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து தானியங்கியாகப் பற்று எடுத்துக் கொள்ளும் வசதியைச் செய்து தரச் சொல்லி நீங்கள் உங்கள் வங்கிக்கு நிலைக் கட்டளைகளை வெளியிடலாம்.

செயல்முறையில் உள்ள முதலீடுகளைப் பின்பற்ற ஆதாரங்கள் இல்லாத சில்லறை முதலீட்டாளர்களுக்குச் எஸ்ஐபி (SIP) ஒரு சிறந்த முதலீட்டுத் திட்டம் என்று நிரூபித்துக் கொண்டுள்ளது.

கருத்துரையிடுக Disqus

 
Top