0

சில வங்கிகள் தடைச் செய்யப்பட்ட பிறகு, நிரந்த வைப்பு நிதி திட்டங்களில் கிடைக்கும் வருவாய் அல்லது வட்டி விகிதம் தென்னகத்தில் தொடர்ந்து மிகக் குறைவான விகிதமாக 6.25% முதல் 7.50% வரை குறைந்துள்ளது. மேலும் கணிசமான பணப் புழக்கத்தை உயர்த்திய அதிக மதிப்புடைய கரன்ஸி நோட்டுகளை நிதியமைப்பிலிருந்து அகற்றிய பிறகு வட்டி விகிதங்கள் மேலும் குறைந்துள்ளன.

தற்போதுள்ள குறைந்த வட்டி விகிதங்களால் வங்கி நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்வது ஒரு மோசமான யோசனையாக இருப்பது ஏன் என்பதற்கான 4 காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

1. உங்கள் நீண்ட காலத்திற்கான செல்வத்தை உருவாக்கும் திட்டத்தை எதிர் கொள்வதில் தோல்வியுறுகிறது: 
 
பணத்தைச் சேமித்தல் அல்லது வாங்கும் அதிகாரத்தை இன்னமும் தக்க வைத்துக் கொள்ளுதல் ஒரு வங்கி வைப்பு நிதியில் சாத்தியமாகும். ஆனால் நீண்ட காலத்திற்கான நிதியியல் இலக்குகள் அல்லது செல்வத்தை உருவாக்கும் திட்டங்களை வங்கி வைப்பு நிதிகளால் எதிர் கொள்ள மடியாது. இந்தத் திட்டம் இயல்பாகவே கிட்டதட்ட ஒவ்வொரு முதலீட்டாளரின் விருப்பமான தேர்வாக இருந்த போதிலும் இதில் ஒரு ஓய்வூதியத் திட்டமோ அல்லது குழந்தையின் கல்விக்காக அல்லது திருமணத்திற்காக முதலீட்டிலிருந்து வருமானத்தைப் பெறும் திட்டத்தை உருவாக்கவோ சாத்தியமில்லை.
2. எதிர்மறையான உண்மை வருவாய்கள்: 
 
வங்கிகளால் வைப்பு நிதிகளுக்குத் தரப்படுவதாகக் கூறப்படும் சராசரி 6 முதல் 7% வட்டி விகிதங்கள் வெறும் கண்துடைப்பே ஆகும். இன்றைய சூழ்நிலையில் பணவீக்கமும் உண்மை வருவாயுடன் கணக்கிடப்படுகிறது. மேலும் பொதுவாகப் பணவீக்கம் வருடாந்திர அடிப்படையில் 10% விகிதத்தில் அதிகரித்து வருகிறது. எனவே வங்கி வைப்பு நிதிகளில் கிடைக்கும் 7% வருவாய் ஒரே நேரத்தில் பணவீக்க அளவை அதிகரிப்பதில்லை.
3. வரிவிதிப்புச் சிக்கல்கள்: வங்கி வைப்பு நிதிகளிலிருந்து பெறப்படும் வட்டிக்கு ஒரு தனிநபரின் வருமான வரி வரம்பு விகிதத்தின் கீழ் வரி விதிக்கப்படுகிறது. ரூ 10 லட்சம் மதிப்புடைய ஒரு வருட முதிர்வு காலம் கொண்ட ஒரு வங்கி வைப்பு நிதி ரூ 70,000 ஐ வட்டியாக ஈட்டுகிறது. இந்த வருவாய்க்கு உயர்ந்த வரி விதிப்பு அடைப்புக்குள் விழும் ஒரு நபருக்கு 30% என்ற அடிப்படையில் ரூ 23,666 வரியாக விதிக்கப்படுகிறது.
4. பணத்தைச் சேமிக்கக் கடன் நிதிகள் மற்றும் நிறுவன வைப்பு நிதிகள் போன்ற பாதுகாப்பான தேர்வுகள்: 
 
உயர்ந்த வட்டி விகிதங்கள் அத்துடன் பிற கடன் திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு, வசதி, வரிவிதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவனங்களின் நிலையான வைப்புத் தொகைகள் சிறந்தவையாகும். கடன் நிதிகளைப் பொறுத்த வரை அவற்றைத் திரும்பப் பெறும் முதிர்வுக் காலத்தில் மட்டுமே வரி செலுத்த வேண்டியிருக்கும். கூடுதலாகப் பணவீக்கத்தைக் குறைக்கும் முறைப்படுத்தப்பட்ட பொருளாதார ஒழுங்கு முறை அனுகூலமும் இதில் கிடைக்கப் பெறுகிறது. எனவே குறுகிய காலத்திற்கு முதலீட்டாளர்களின் கைகளுக்குச் சிறந்த வருவாய் கிடைக்க வேண்டுமென்றால் வங்கியின் நிலையான வைப்பு நிதிகளுக்குப் பதிலாகக் கடன் நிதிகளை நீங்கள் கருத்தில் கொள்ளலாம்.
கடன் நிதி திட்டங்களில் உள்ள சிறப்பம்சங்கள் கடன் நிதிகள் ஒரு சிறப்பம்சத்துடன் வருகிறது. இதில் திட்டத்தின் முடிவில் உங்கள் கைவசம் கூடுதல் நிதிகள் இருக்கும். மேலும் நீங்கள் இந்தத் திட்டத்தின் முடிவில் அதிக வருவாயைப் பெற விரும்பினால் உங்களுடைய தற்போதுள்ள முதலீட்டில் மேலும் கூடுதல் முதலீட்டையும் சேர்த்துக் கொள்ளலாம்.

கருத்துரையிடுக Disqus

 
Top