0

எலும்பில்லாத கோழி கறி - 1/2 கிலோ
முட்டை - 2
தயிர் - 1/2 கப்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பச்சை மிளகாய் - 2
ஆரஞ்சு, சிகப்பு கேசரி கலர் - இரண்டு சிட்டிகை
சோள மாவு - 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எலுமிச்சை - 1
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - பொரிக்க
முட்டையின் வெள்ளைக்கருவினை மட்டும் பிரித்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். அதில் ஆரஞ்சு கலர், இஞ்சி பூண்டு விழுது, சோள மாவு, எலுமிச்சை சாறு, மிளகாய்த்தூள், உப்பு போட்டு கலக்கி, அதில் நறுக்கின சிக்கன் துண்டுகளைப் போட்டுப் பிரட்டி 1 மணி நேரம் ஊறவிடவும்.
மற்றொரு கிண்ணத்தில் தயிர், சிகப்பு கலர், சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து, நன்றாக கலந்து வைக்கவும்


வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மசாலாவில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டங்களைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
அதிகம் சிவக்கவிடாமல் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவற்றை ஒரு தட்டில் வைத்து எண்ணெய் வடியவிடவும்.

பின்னர் ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
அத்துடன் கரைத்து வைத்துள்ள தயிர் கலவையினை
சேர்க்கவும்
பின்னர் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டங்களையும் சேர்த்து வேகவிடவும்


மசாலா சுண்டி சிக்கன் துண்டங்கள் நன்றாக வெந்தபிறகு இறக்கி, மேலே கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

கருத்துரையிடுக Disqus

 
Top