0
 


வீட்டில் இருக்கும் சுவற்றின் எண்ணெய் கரைகள் வீட்டின் அழகையே கெடுக்கிறது. இந்த எண்ணெய் கரைகள் சுவற்றில் பொதுவாக சாயும் போது, சமைக்கும் போது என்றெல்லாம் அதிகம் படுகிறது. இத்தகைய கரைகளை நீக்குவது மிகவும் கடினமாக இருக்கும். இந்த கரைகள் சுவற்றை அழுக்காகவும், ஒரு பழைய வீடு போலும் காண்பிக்கும். பொதுவாக எண்ணெய் கரையை சோப்புத் தண்ணீரில் எளிதாக நீக்கலாம் என்று நினைப்பார்கள். ஆனால் அது எளிதில் முடியாத விஷயம். அத்தகைய எண்ணெய் கரைகளை ஒரு சிலவற்றால் எளிதில் நீக்கலாம்.
எண்ணெய் கரையை நீக்க சில வழிகள்...
வினிகர் : பஞ்சை சிறிது எடுத்துக் கொண்டு, அதை வினிகரில் முற்றிலும் நனைத்து எண்ணெய் உள்ள இடத்தில், அந்த கரை போகும் வரை நன்கு தேய்க்கவும். இந்த முறையை மேற்கொண்டால் சுற்றில் உள்ள கரையானது எளிதாக போய்விடும். மேலும் கரையை வினிகர் கொண்டு தேய்த்தப் பின், ஒரு சுத்தமான துணியைக் கொண்டு துடைக்கவும். இதனால் கரையானது போய் விடும்.
சோளக்கஞ்சி : சோளக்கஞ்சியை நீரில் கரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும். பின் அந்த போஸ்ட்-ஐ எண்ணெய் கரை உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைக்கவும். பின் அந்த இடத்தை ஈரமான துணி கொண்டு துடைத்து எடுக்கவும். இந்த முறையை தொடர்ந்து கரை போகும் வரை செய்யவும். இது சுவற்றில் இருந்து எண்ணெய் பசையை நீக்க ஒரு சிறந்த வழியாகும்.
வெப்பம் : சுவற்றில் இருந்து கரையை அகற்ற இரு ஒரு சிறந்த வழி. முதலில் ஒரு சிறு இரும்புத் துண்டை சிறு தீயில் சூடேற்றிக் கொள்ளவும். பின் சிறிது டிஸ்யூ பேப்பரை எடுத்து மடித்துக் கொள்ளவும். பின் அந்த டிஸ்யூ பேப்பரை கரை உள்ள இடத்தில் வைத்து பிறகு சூடேற்றிய இரும்பை வைத்து அந்த இடத்தில் பேப்பர் மீது தேய்க்கவும். இவ்வாறு பல முறை தேய்த்தால் கரையானது போய்விடும். அப்படி தேய்க்கும் போது கவனமாக செய்ய வேண்டும். இப்படி இரும்பை வைத்து தேய்க்கும் போது எண்ணெயானது இளகிவிடும், அந்த இளகிய எண்ணெயை பேப்பர் ஆனது உறிஞ்சிவிடும். பின் அதனை வெதுவெதுப்பான சோப்புத் தண்ணீரால் சுத்தம் செய்து, பின் துணியால் துடைத்தால் கரையானது போய்விடும்.
பெயிண்ட் : எண்ணெய் கரையானது வீடு முழுவதும் இருந்தால், அப்போது அதனை சுத்தம் செய்வதென்பது மிகவும் கடினம். அதனை நீக்க ஒரே வழி, சுவற்றில் பெயிண்ட் அடிப்பது தான். எமல்சன் பெயிண்டானது கரைகளை நீக்காது. ஆனால் அதற்கு ஒரு வழி இருக்கிறது. அது என்னவென்றால், முதலில் சுவற்றை வெதுவெதுப்பான சோப்பு தண்ணீரால் கழுவ வேண்டும். பின் அந்த சுவற்றில் கீழ்ப்பூச்சு பூசி காய வைக்க வேண்டும். பிறகு அந்த சுவற்றில் உண்மையான கலரை அடிக்க வேண்டும். இதனால் அந்த எண்ணெய் கரையை அகற்றலாம்.
மேற்கூரிய இந்த குறிப்புகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும். இவ்வாறெல்லாம் செய்தால் எண்ணெய் கரையானது எளிதாகப் போய்விடும்.

கருத்துரையிடுக Disqus

 
Top