எங்கோ இருக்கும்
என் உயிரின் உறவே
என் என்னவளே !
என் பிராத்தனை வீண் போகாது
அன்பே
"நீண்ட பிரிவு எதையும் சீக்கரம் மறக்க செய்யுமாம் "
இந்த பழமொழி உண்மை என்றாலும்
உன்னை மறப்பதில் மட்டும் ஏனோ தோற்று போனது ...
நேரத்திற்கு தவறாமல் சாப்பிடு கண்ணே !
நீ என்னை எரிந்தது போல்
என்னால் உன்னை தூக்கி எரிய முடியவில்லை ..
கொஞ்சும் வார்த்தைகள் கூட எனக்கு தெரியாது
எல்லாம் உன்னிடம் கற்றுக் கொண்டதுதான் என் செல்ல பெண்ணே !
மன உறுதி படைத்த என் மனம்
உன் பிரிவால் நிலை குலைந்து போனதடி ..
என் அம்முவே
தனியாக எங்கும் வெளியே செல்லாதே !
சாலையை கடக்கும் போது செல்போனில் பேசாதே ..
நான் உன் அழகை மட்டும் நேசிக்கவில்லை என்பது உனக்கு தெரியும்
இடையில் உன் குணம் மாறியதும் உனக்கு தெரியும் ..
நான் உன் அன்புக்கு அடிமை என்பதை நீ நன்கு உணர்ந்தவள் ..
பிறகு ஏன் என்னை காயப்படுத்தி! பிரிந்தாய் ..
அன்பான வார்த்தைகளால் சொல்லி புரியவைத்திருக்கலாமே !
நீ எனக்கு வேண்டும் என்பது எனக்கு எவ்வளவு முக்கியமோ
அவ்வளவு முக்கியம் நீ நலமோடு வாழ்வது என்பது ...
உண்மையில் "மனம் தொட்டு சொல்"
உன்னை புரிந்துக்கொள்ளாதவனா நான் ?
உடைந்த கண்ணாடி போலதான்
நம் மனங்கள் ஒட்டாது என்று தெரியும் ..
சில நினைவுகளை என் மனதில் அழுத்தி வைக்க முடியவில்லை ..
இரவில் மூச்சு விடவும் சிரமமாய் உள்ளதடி
அதான் வெளிபடுத்துகிறேன் ..
வாழ்வது ஒரே ஒரு முறைதான்
நல்ல கணவரை தேர்ந்தெடு ..
என்னை போல் உன்மேல் அதிக பைத்தியமாக இருக்க போகிறான் ..
ஏன் என்றால் அதிக அன்பு பிரிவில்-தான் முடிகிறது ..
உன் மனதில் எதோ ஒரு மூலையில் என் நினைவுகள்
இருந்தாலும் அதை மறந்து விடு .
மறப்பது என்பது உனக்கு புதிதல்ல ...
கருத்துரையிடுக Facebook Disqus