0
புதிது புதிதாகச் சந்தைக்கு வரும் அழகு சாதனங்களை வாங்கிக் குவிப்பவரா நீங்கள்? வெயிட் ப்ளீஸ்! 

‘பாதரசம் கலந்த சோப்பு, க்ரீம், ஐ லைனர், மஸ்கரா, க்ளென்சிங் போன்ற அழகு சாதனங்களால் சிறுநீரகம் பழுதடைவதோடு, ஒட்டுமொத்த உடலுமே பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனம். 


இந்தியாவில் விற்பனையாகும் அழகு சாதனப் பொருட்களில் சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம் வகைகளே 61 சதவிகிதம். பாதரசம் சருமத்தில் உள்ள மெலனின் என்கிற நிறமியுடன் சேர்ந்து சருமத்தை மேலும் வெள்ளையாக்க உதவுகிறது. தோல் பளிச்சென ஆனாலும், நாளடைவில், சருமம் பாதிக்கப்படும். அழகு சாதனப் பொருட்களின் லேபிளில் பாதரச அயோடைடு, பாதரச குளோரைடு, க்விக் சில்வர், பாதரச சல்பைடு, பாதரச ஆக்சைடு போன்றவை சேர்மானப் பொருட்களாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு இருக்கும். ஆனால், பல அழகு சாதனப் பொருட்களில், பாதரச துணைப் பொருட்கள் சேர்ப்பதுபற்றிய எந்த விவரமும் லேபிளில் இருப்பது இல்லை என்ற அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டுள்ளது. பாதரசம் கலந்த சோப் மற்றும் க்ரீம் வகைகளைப் பயன்படுத்துவதால், சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு பிறக்கும் குழந்தைக்கு நரம்பு தொடர்பான பாதிப்பும் ஏற்படுகிறது என்கிறது இந்த ஆய்வு.

கருத்துரையிடுக Disqus

 
Top