இது உடலின் குருதிச் சுற்றோட்டத்திலேயே தங்கி உள்ளது. உடலின் எல்லாப்
பகுதிகளுக்கும் குருதி ஒரு குறிப்பிட்ட விகிதத்திலேயே செல்கிறது. ஆனால்
நாம் உணவு உட்கொண்டதும் இந்த விகிதம் மாறுபடுகிறது. நாம் உணவு உட்கொண்டதும்
இரைப்பையின் தொழிற்பாடு துரிதமடைவதால் , அந்தப் பகுதிக்கு குருதி அதிகம்
தேவைப்படுகிறது.
ஆகையால் மூளைக்குச் செல்லும் குருதியின் அளவு குறைவடைகிறது. இதனால்
மூளையின் செயற்பாட்டுத் திறனும் குறைவடையும். இதனாலேயே உணவு உட்கொண்டதும்
ஒரு வித மந்த நிலை ஏற்படுகிறது.உணவு உட்கொண்டதும் தூக்கம் வர இதுவே காரணம்.