0
வீணை என்று சொன்னதுமே எல்லோருக்கும் சரஸ்வதியின் நினைவு தான் வரும். ஆனால் 32 வகையான வீணைகளை 31 தெய்வங்கள் இசைப்பதாக புராணங்கள் சொல்கின்றன.
1. பிரம்மதேவனின் வீணை- அண்டம், 
2. விஷ்ணு- பிண்டகம், 
3. ருத்திரர்- சராசுரம், 
4. கவுரி- ருத்ரிகை, 
5. காளி- காந்தாரி, 
6. லட்சுமி- சாரங்கி, 
7. சரஸ்வதி- கச்சபி எனும் களாவதி, 
8. இந்திரன்- சித்தரம், 
9. குபேரன்- அதிசித்திரம், 
10. வருணன்- கின்னரி, 
11. வாயு- திக்குச்சிகை யாழ். 
12. அக்கினி- கோழாவளி, 
13. நமன்- அஸ்த கூர்மம், 
14. நிருதி- வராளி யாழ், 
15. ஆதிசேடன்- விபஞ்சகம், 
16. சந்திரன்- சரவீணை, 
17. சூரியன்- நாவீதம், 
18. வியாழன்- வல்லகி யாழ், 
19. சுக்கிரன்- வாதினி, 
20- நாரதர்- மகதி யாழ், 
21. தும்புரு- களாவதி (மகதி), 
22. விசுவாவசு- பிரகரதி, 
23. புதன்- வித்யாவதி, 
24. ரம்பை- ஏக வீணை, 
25. திலோத்தமை- நாராயணி. 
26. மேனகை- வாணி, 
27. ஊர்வசி-லகுவாக்ஷி, 
28. ஜயந்தன்- சதுசும், 
29. ஆஹா, ஊஹூ தேவர்கள்- நிர்மதி, 
30. சித்திரசேனன்- தர்மவதி (கச்சளா) 
31. அனுமன்- அனுமதம். 
32 வது வகை வீணையை வாசிப்பவன், ராவணன். அவனது வீணையின் பெயர், ராவணாசுரம்.

கருத்துரையிடுக Disqus

 
Top