0
தேவையான பொருள்கள்:

மசால் வடை – 10
வெங்காயம் – 75கிராம்
பச்சை மிளகாய் – 2
மல்லிப் பொடி -இரண்டு தேக்கரண்டி
மிளகாய் பொடி – ஒன்றரைத் தேக்கரண்டி
மஞ்சள் பொடி – சிறிதளவு
தேங்காய் துருவியது – 5 தேக்கரண்டி
சோம்பு – அரைத் தேக்கரண்டி
முந்திரி -5
இஞ்சி – சிறுதுண்டு
சமையல் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
கிராம்பு- 2
மிளகு – கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு தேக்கரண்டி
மல்லி – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

வடை செய்ய . . .

*அரை கிலோ ஆழாக்குக் கடலைப் பருப்பை இரண்டு

*மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

*நன்கு ஊறிய பிறகு நீரை சுத்தமாக வடிகட்ட வேண்டும்.

*அதில் ஒரு தேக்கரண்டிப் பருப்பை தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

*மீதி உள்ள கடலைப் பருப்பை உப்பு போட்டு பரபரவென்று மிக்சியில் அரைக்க வேண்டும்.

*அரைத்த மாவுடன் தனியே எடுத்து வைத்த ஒரு தேக்கரண்டி கடலைப் பருப்பு, நறுக்கிய வெங்காயம், சிறிதளவு இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாகப் பிணைய வேண்டும்.

*பின்பு எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்ட வேண்டும்.

*ஒரு கடாயில் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும்.

*எண்ணெய் காய்ந்ததும் பருப்பு உருண்டையை வடையாக செய்து எண்ணெயில் போட வேண்டும்.

*வடையை இருபுறமும் திருப்பி விட்டு வடை நன்கு வெந்ததும் எண்ணெய் இல்லாமல் வடித்து எடுக்க வேண்டும்.

*இப்போது சூடான மசால் வடை ரெடி.

மசால் வடைக் குழம்பின் செய்முறை . . .

*மசால் வடையை கடையிலும் வாங்கலாம் வீட்டிலும் சுடலாம்.

*வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சிறியதாக நறுக்க வேண்டும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றாமல் சோம்பு மற்றும் முந்திரியை வறுக்க வேண்டும்.

*பின்பு தேங்காய் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.அதனுடன் இஞ்சி சேர்த்து மிருதுவாக அரைக்க வேண்டும்.

*பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும்.

*எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கிராம்பு, பச்சை மிளகாய் போட்டு நன்கு பொரிய விட வேண்டும்.

*பொறிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி, மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

*நன்கு வதங்கியதும் அதில் அரைத்த தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும்.

*நன்கு வதக்கிய பின்பு மூன்று டம்ளர் நீர் ஊற்றி குழம்பை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

*குழம்பு நன்கு கொதித்ததும் அதில் மசால் வடைகளை உள்ளே போட வேண்டும்.

*வடை குழம்பிலுள்ள நீரைக் குடித்து விடும்.குழம்பு போதுமான அளவு கெட்டியானதும் மல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கி வைக்க வேண்டும்.

*இப்போது சூடான மணமான மசால் வடைக் குழம்பு தயார்.இந்த மசால் வடைக் குழம்பை, சாதத்திற்கு ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

*அதை விட இட்லி, தோசை, சப்பாத்தி,பூரி, ஆப்பம், மற்றும் இடியாப்பம் ஆகியவற்றிற்குப் பொருத்தமான குழம்பு என்றால் அது மசால் வடைக் குழம்புதான்.

மருத்துவக் குணங்கள் . . .


*கடலைப் பருப்பில் கால்சியம் மற்றும் புரோட்டின் சத்து நிறைந்துள்ளது.

*இவற்றை உண்பதால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கின்றன.

*இவை கண், இதயம், மூளை ஆகியவற்றை நன்கு வளரச் செய்கின்றன.

*இவை எலும்புகளுக்கு வலுவூட்டுகின்றன.
புகழ்பெற்ற உணவு தானியம் என்றால் அது கடலைப் பருப்புதான்.

*அவை அதிகம் பிரபலமானது இந்தியாவில்தான்.

“ருசியான சமையல் செய்வோம்;ஆரோக்கியமான உணவு உண்போம்”.

கருத்துரையிடுக Disqus

 
Top