தந்தை
மகனுக்கு எதையேனும் அன்போடு தரும் பொழுது இருவரும் சிரிக்கிறார்கள்; மகன்
திருப்பி செலுத்தும் பொழுது இருவரும் அழுகிறார்கள்.-ஷேக்ஸ்பியர்
நூறு பள்ளி ஆசிரியர்களை விட உயர்ந்தவர் ஒரு தந்தை.-ஜார்ஜ் ஹெர்பர்ட்
எந்த தந்தையும் இன்னொரு மனிதருக்கு தரக்கூடிய மிகச்சிறந்த பரிசை எனக்கு தந்தார். என்னை ஆழமாக நம்பினார் அவர் – ஜிம் வல்வனோ
வரலாற்று
விநாடி வினாவில் நான் மூன்றாம் இடம் பெற்ற பொழுது இரண்டாவது,முதலாவது
இடமும் உன்னால் அடையமுடியும் என்றார் என் அப்பா. முதலிடம் வென்றதும் மாறாத
புன்னகையுடன் இடங்கள் என்பது ஒரு பொருட்டே இல்லை; முனைதலே முக்கியம்
என்றார் – தாலியா சால்டஸ்
இயற்கையின் உன்னத படைப்பு தந்தையின் ஈடிலா இதயம்.-பிரான்கோயிஸ் ப்ரிவோஸ்ட்
எளிய மென்மையான பல குரல்கள் தந்தையே என தன்னை அழைப்பதை கேட்கும் வாய்ப்பு பெற்றவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்.-லிடியா சைல்ட்
தன்
அன்புக்குழந்தையை பால்யத்தில் பெரிய பெண் போல உணரச்செய்யும் தந்தைகள்
வளர்ந்ததும் அவர்களை சிறுமி போல மிகைத்த அன்பால் உணரச்செய்கிறார்கள்.-எனிட்
பக்னோல்ட்
என்னோடும்
என் தம்பியோடும் புல் நிறைந்த தோட்டத்தில் தந்தை விளையாடுவார் அன்னை
,”புற்களை கிழித்து விடாதீர்கள் !”என்பார். தந்தை எங்கள் தலை கோதியபடி
,”நாம் புற்களை வளர்க்கவில்லை;பிள்ளைகளை வளர்க்கிறோம் !”என்பார் – ஹார்மான்
கில்ப்ரேவ்
தந்தைகளிடம்
கனிவோடு இருங்கள் ; நீங்கள் பால்யத்தில் இருந்த பொழுது உங்களை அளவில்லாமல்
அன்பு செய்தவர் அவர்; உங்களின் நாவில் இருந்து உருண்டோடிய முதல் மழலை
மொழியை முனைந்து புரிந்துகொண்ட நம்மின் அறியா உலகின் வெளிச்சத்தில்
நிறைத்தவர் இல்லையா அவர் ?- மார்கரெட் கோர்டினி
தந்தைகள்
எளியவர்கள் ; குறையா அன்பால் அவர்கள் நாயகர்களாக,சாகசக்காரர்களாக,கதை
சொல்லிகளாக,கீதம் இசைக்கும் பாடகர்களாக மாற்றப்படுகிறார்கள் – பாம் பிரவுன்
ஒவ்வொரு
தந்தையும் தன்னுடைய அறிவுரையை விட தன்னையே பிற்காலத்தில் தன் மகன்
பின்பற்றுவான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.- சார்ல்ஸ் கேட்டிரிங்
தந்தைகளை மரணம் நம்மிடம் இருந்து பிரிக்கலாம். நம் நினைவுகளில் நிரம்பி அழியாத நாயகர்கள் ஆகிறார்கள் அவர்கள் –கொன்ராட் ஹால்
நல்ல அப்பாக்கள் பாடப்படாத,போற்றப்படாத,கவனம் பெறாத சமூகத்தின் விலை மதிப்பில்லா சொத்துகள்.-பில்லி க்ரஹாம்
தன்
தந்தை சொன்னது சரிதான் என்று ஒரு மகன் உணரும் பொழுது அவன் சொல்வது தவறு
என்று உணரும் வயதுப்பிள்ளை அவனுக்கு இருக்கிறான் –சார்ல்ஸ் வர்ட்ஸ்வர்த்
யார் வேண்டுமானாலும் தந்தையாக இருக்கலாம்; ஆனால்,அன்புக்குரிய அப்பாவாக திகழ்வது தனிக்கலை.-ஆனி காடஸ்
தெய்வத்துக்கு தகப்பன் என்பதை விட புனிதமான பெயர் இருக்க முடியாது.-வில்லியம் வர்ட்ஸ்வர்த்
வெறும் உதிரம் உடலால் ஆனதில்லை தந்தை-பிள்ளை உறவு. அது இதயங்களால் பிணைந்த உன்னத உறவு.- ஜோஹாத் ஷில்லர்
அதீதக்கனிவுடன் என்னிடம் நடந்துகொண்டதால் சந்தேகமே இல்லாமல் என் அப்பாவே உலகின் மிகப்பெரிய வீரர். -ஆன் எலிசெபத்
வெற்றிகரமான தந்தையாக இருக்க எளிய விதி ஒன்றுதான். பிள்ளை வளரும் முதல் இரண்டு வருடங்கள் பிள்ளையை கண்டுகொள்ளாதீர்கள்.-ஹெமிங்வே
மகன் பிறந்த பிறகுதான்
அப்பாவின் பாசத்தை
அறிந்துகொள்ள முடிந்தது
என் அன்பு மகனே
உன் மகன் பிறந்ததும்
என்னை நீ அறிவாய்!-நா.முத்துக்குமார்
கருத்துரையிடுக Facebook Disqus