Latest News

0


தந்தை மகனுக்கு எதையேனும் அன்போடு தரும் பொழுது இருவரும் சிரிக்கிறார்கள்; மகன் திருப்பி செலுத்தும் பொழுது இருவரும் அழுகிறார்கள்.-ஷேக்ஸ்பியர்


நூறு பள்ளி ஆசிரியர்களை விட உயர்ந்தவர் ஒரு தந்தை.-ஜார்ஜ் ஹெர்பர்ட்




எந்த தந்தையும் இன்னொரு மனிதருக்கு தரக்கூடிய மிகச்சிறந்த பரிசை எனக்கு தந்தார். என்னை ஆழமாக நம்பினார் அவர் – ஜிம் வல்வனோ




வரலாற்று விநாடி வினாவில் நான் மூன்றாம் இடம் பெற்ற பொழுது இரண்டாவது,முதலாவது இடமும் உன்னால் அடையமுடியும் என்றார் என் அப்பா. முதலிடம் வென்றதும் மாறாத புன்னகையுடன் இடங்கள் என்பது ஒரு பொருட்டே இல்லை; முனைதலே முக்கியம் என்றார் – தாலியா சால்டஸ்



இயற்கையின் உன்னத படைப்பு தந்தையின் ஈடிலா இதயம்.-பிரான்கோயிஸ் ப்ரிவோஸ்ட்




எளிய மென்மையான பல குரல்கள் தந்தையே என தன்னை அழைப்பதை கேட்கும் வாய்ப்பு பெற்றவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்.-லிடியா சைல்ட்




தன் அன்புக்குழந்தையை பால்யத்தில் பெரிய பெண் போல உணரச்செய்யும் தந்தைகள் வளர்ந்ததும் அவர்களை சிறுமி போல மிகைத்த அன்பால் உணரச்செய்கிறார்கள்.-எனிட் பக்னோல்ட்




என்னோடும் என் தம்பியோடும் புல் நிறைந்த தோட்டத்தில் தந்தை விளையாடுவார் அன்னை ,”புற்களை கிழித்து விடாதீர்கள் !”என்பார். தந்தை எங்கள் தலை கோதியபடி ,”நாம் புற்களை வளர்க்கவில்லை;பிள்ளைகளை வளர்க்கிறோம் !”என்பார் – ஹார்மான் கில்ப்ரேவ்




தந்தைகளிடம் கனிவோடு இருங்கள் ; நீங்கள் பால்யத்தில் இருந்த பொழுது உங்களை அளவில்லாமல் அன்பு செய்தவர் அவர்; உங்களின் நாவில் இருந்து உருண்டோடிய முதல் மழலை மொழியை முனைந்து புரிந்துகொண்ட நம்மின் அறியா உலகின் வெளிச்சத்தில் நிறைத்தவர் இல்லையா அவர் ?- மார்கரெட் கோர்டினி



தந்தைகள் எளியவர்கள் ; குறையா அன்பால் அவர்கள் நாயகர்களாக,சாகசக்காரர்களாக,கதை சொல்லிகளாக,கீதம் இசைக்கும் பாடகர்களாக மாற்றப்படுகிறார்கள் – பாம் பிரவுன்



ஒவ்வொரு தந்தையும் தன்னுடைய அறிவுரையை விட தன்னையே பிற்காலத்தில் தன் மகன் பின்பற்றுவான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.- சார்ல்ஸ் கேட்டிரிங்




தந்தைகளை மரணம் நம்மிடம் இருந்து பிரிக்கலாம். நம் நினைவுகளில் நிரம்பி அழியாத நாயகர்கள் ஆகிறார்கள் அவர்கள் –கொன்ராட் ஹால்




நல்ல அப்பாக்கள் பாடப்படாத,போற்றப்படாத,கவனம் பெறாத சமூகத்தின் விலை மதிப்பில்லா சொத்துகள்.-பில்லி க்ரஹாம்



தன் தந்தை சொன்னது சரிதான் என்று ஒரு மகன் உணரும் பொழுது அவன் சொல்வது தவறு என்று உணரும் வயதுப்பிள்ளை அவனுக்கு இருக்கிறான் –சார்ல்ஸ் வர்ட்ஸ்வர்த்



யார் வேண்டுமானாலும் தந்தையாக இருக்கலாம்; ஆனால்,அன்புக்குரிய அப்பாவாக திகழ்வது தனிக்கலை.-ஆனி காடஸ்


தெய்வத்துக்கு தகப்பன் என்பதை விட புனிதமான பெயர் இருக்க முடியாது.-வில்லியம் வர்ட்ஸ்வர்த்


வெறும் உதிரம் உடலால் ஆனதில்லை தந்தை-பிள்ளை உறவு. அது இதயங்களால் பிணைந்த உன்னத உறவு.- ஜோஹாத் ஷில்லர்


அதீதக்கனிவுடன் என்னிடம் நடந்துகொண்டதால் சந்தேகமே இல்லாமல் என் அப்பாவே உலகின் மிகப்பெரிய வீரர். -ஆன் எலிசெபத்



வெற்றிகரமான தந்தையாக இருக்க எளிய விதி ஒன்றுதான். பிள்ளை வளரும் முதல் இரண்டு வருடங்கள் பிள்ளையை கண்டுகொள்ளாதீர்கள்.-ஹெமிங்வே







மகன் பிறந்த பிறகுதான்
அப்பாவின் பாசத்தை
அறிந்துகொள்ள முடிந்தது
என் அன்பு மகனே
உன் மகன் பிறந்ததும்
என்னை நீ அறிவாய்!-நா.முத்துக்குமார்

கருத்துரையிடுக Disqus

 
Top