0
ஒரு வாரமாக பெய்த தொடர் மழையில் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. வெள்ளத்தில் பெரும்பாலானோர் தங்களது வீடுகளை இழந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஒரு வார மழைக்கு சற்று ஓய்வு அளிக்கும் விதமாக இன்று வெயில் அடிக்கும் நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து சென்னையில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க ஏர்டெல் நிறுவனம் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.

இதனால் சென்னையில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க ஏர்டெல் நம்பரில் இருந்து 1948 என்ற எண்ணுக்கு கால் செய்ய வேண்டும். கால் செய்த இரண்டு மணி நேரங்களுக்குள் காணாமல் போனவர்கள் கடைசியாக இருந்த இடம் உங்களுக்கு குறுந்தகவலாக அனுப்பப்படும். 


Locate your loved ones. Call 1948 from your Airtel number in Chennai & TN.

கருத்துரையிடுக Disqus

 
Top