சாதாரண திரையை தொடு திரையாக மாற்றும் சிறிய கருவி தொழில்நுட்ப சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை பற்றிய விரிவான தகவல்களை ஸ்லைடர்களில் பாருங்கள்.
நியோநோடு ஸ்வீடன் நாட்டை சேர்ந்த நியோநோடு எனும் நிறுவனம் ஏர்பார் எனும் கருவியை அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த கருவியை சாதாரண திரையை தொடு திரையாக மாற்றிடும் திறன் கொண்டிருக்கின்றது.
யுஎஸ்பி போர்ட் மூலம் கணினியில் இணைத்து திரையின் கீழ் பொருத்தினால் போதும். உடனடியாக உங்களது திரை தொடுதிரையாகி விடும்.
ஏர்பார் கருவியை பொருத்திய பின் உங்களது கை, பென்சில், கையுறை என எதை கொண்டும் திரையை பயன்படுத்தலாம்.
ஏர்பார் பயன்படுத்த யுஎஸ்பி மட்டுமே போதுமானது, தனியே ஏதும் மென்பொருள் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.
தற்சமயம் வரை விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் ஏர்பார் கருவியானது விரைவில் ஆப்பிள் இயங்குதளத்திலும் பயன்படுத்த முடியும் என கூறப்படுகின்றது.
http://air.bar
ஏர்பார் இணையதளத்தில் 15.6 இன்ச் திரை கொண்ட கணினி வகைகளுக்கான கருவியை $49க்கு முன்பதிவு செய்திட முடியும். இந்த கருவி சந்தையில் 2016 முதல் விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது.
கருத்துரையிடுக Facebook Disqus