0
பஞ்சகவ்யாதயாரிக்கும் முறை.

தமிழ்நாட்டிலுள்ளபாரம்பரிய தொழில் நுட்பத்தில் அனுபவம் வாய்ந்த, இயற்கை வழிச்சாகுபடியாளர்களின் சீரிய செயல் முறைகளின் அடிப்படையில், கீழ் காணும் மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி முறைகளைக் கொண்டு பஞ்சகவ்யா தயாரிக்கப்படுகிறது.

20 லிட்டர் பஞ்சகவ்யா தயாரிக்க தேவையானபொருட்கள்.

பசுஞ்சாணம்------------------------- 5.0 கிலோ

பசுவின் கோமையம்------------------ 5.0 லி

பசும்பால்---------------------------- 2.0 லி

தயிர்-------------------------------- 2.0 லி

நெய்-------------------------------- 1.0 லி

கரும்புச்சாறு------------------------- 3.0 லி

தென்னை இளநீர்--------------------- 3.0 லி

வாழைப்பழம்------------------------ 2.0 கிலோ


பசுஞ்சாணிஐந்துகிலோவுடன் பசு மாட்டு நெய் ஒரு லிட்டரைக் கலந்து, பிசைந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் நான்கு நாட்கள்வைத்து தினம் காலை மாலை இரு முறை இதைப் பிசைந்துவிட வேண்டும். ஐந்தாவது நாள் மற்ற பொருட்களுடன்இவைகளை ஒரு வாயகன்ற மண் பானை அல்லதுசிமெண்டுத் தொட்டி அல்லது பிளாஸ்டிக் தொட்டி யில் போட்டு நன்கு கரைத்து கலக்கி, கம்பி வலையால் அல்லது நைலானாலானகொசுவலையை கொண்டு மூடி நிழலில்வைக்கவும். ஒரு நாளைக்கு இருமுறை வீதம் காலையிலும்மாலையிலும் 20 நிமிடங்கள் கிளறிவிட வேண்டும். இது பிராணவாயுவை பயன் படுத்தி வாழும் நுண்ணுயிரிகளின் செயல் திறனை ஊக்குவிக்கின்றது.இந்த முறையில் முப்பதுநாட்களில் பஞ்சகவ்யா தயாராகிவிடும்.

பஞ்சகவ்யாவின்இயல்வேதிப் பண்புகளை ஆராய்ததில் அதில் பயிருக்குத்தேவையானதழை, மணி, சாம்பல் சத்துக்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் பயிர் வளர்ச்சிஊக்கிகளான இண்டோல் அசிடிக் அமிலம் மற்றும்ஜிப்ரலிக் அமிலம் ஆகியவையும் இருப்பது கண்டறியப்பட்டது.பஞ்சகவ்யாவில் கரும்புச்சாறு வெல்லம் ஆகியவைஒரு பாகமாக சேர்ப்பதால் அதுஅமிலதன்மையுடன் உள்ளது. எனவே நொதிக்கும் நுண்ணுயிர்களானஈஸ்ட் மற்றும் லாக்டோபேசில்லஸ் ஆகியவையும்பஞ்சகவயாவில் அதிகம் காணப்படு கின்றன.லாக்டோபேசில்லஸானது அங்கக அமிலங் கள், ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் பிற நோய் எதிர்ப்புப்பொருடகளையும் உற்பத்தி செய்கிறது.

இப்பொருட்கள்நோய்க் கிருமிகளை எதிருக்கும் திறன் பெற்றதோடு உயிர்வளர்ச்சி ஊக்கிகளாகவும் செயல் படுகிறது. இதோடுஐசோபிரின் கூட்டுப் பொருட்களும் பஞ்சகவ்யாவில்உள்ளன.

ஒரு லிட்டர்பஞ்சகவ்யாவை உற்பத்தி செய்ய ஆகும் செலவு சுமார் 35 முதல் 40 ரூபாய் ஆகும். மேலும் விவசாயிகள் தங்களிடமுள்ள கால் நடைகளிலிருந்து கிடைக்கும்பொருட்களிலிருந்து மிகப் பெரிய அளவில் பஞ்சகவ்யாவைதயாரித்து பயன் பெற முடியும். பயிர்களுக்கும், மரங்களுக்கும் பஞ்சகவ்யா தெளிக்கும் முறையானது வேறுபடுகிறது. பொதுவாக ஒரு ஏக்க ருக்கு பயிர்களுக்கு 3.5 லிடர்ரும், மரங்களுக்கு 4.7 லிட்டரும் ஒருதடவை தெளிப்பதற்கு தேவைப்படும் பஞ்ணகவ்யாவை 3 சதவீதக் கரைசலாக (1 லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி பச்ணகவ்யா)கலந்து 15-30 நாட்கள் இடைவெளியில் பயிர்களுக்குத்தெளிக்கலாம்.

பஞ்சகவ்யாவானதுஏராளமான நுண்ணூட்ட சத்துக் களையும்வளர்ச்சியூக்கிகளையும், நுண்ணுயிர்களையும் மற்றும் அங்கக னிமங்களையும்கொண்டுள்ளது.இதுவே தாவரங்களின் அதிகப்படியான வளர்ச்சியையும் மகசுலையும் கொடுப்பது மட்டுமல்லாமல்பயர்களையும், மரங்களையும், பூச்சி மற்றும்நோய்களிடமிருந்து பாது காத்துஇயற்கைக்கு தீங்கு விளைவிக்காத, பூச்சி மற்றும் நோய் கொல்லியாகவும், வளர்ச்சியூக்கியாகவும் பெரும் பங்குவகிக்கிறது.

இதை தயாரிக்க மாட்டு சாணம் 3 கிலோ, மாட்டு சிறுநீர் (கோமியம்) - 3லி, பால் - 2லி, தயிர் - 2லி, நாட்டு சர்க்கரை - 1 கிலோ, (கரும்புச்சாறு - 2லி பயன்படுத்தலாம்), வாழைப்பழம்-12, இளநீர்-2லி, ஈஸ்ட்-100கி, கடலை பிண்ணாக்கு- 1 கிலோ.

பிண்ணாக்கை ஊறவைத்து, அனைத்து பொருட்களையும் மண் பானை / வாளியில் கலந்து, துணியால் மூடி நிழலில் வைக்க வேண்டும். தினம் கலக்கி விட்டால் நுண்ணுயிர்கள் பெருகும். இதன் மூலம் 30லி பஞ்சகவ்யா கிடைக்கும். 10 லிட்டர் நீரில் 300மிலி கலந்து தெளிக்கலாம். பயிர்கள் சிறப்பாக வளரும். 6 மாதம் வரை இதை பயன்படுத்தலாம். 1 ஏக்கருக்கு 30லி பஞ்சகவ்யாவுடன் 200லி அமுதக் கரைசல் பாசன நீருடன் கலந்து விடலாம். இதை பயன்படுத்த மண் வளம் கூடும். பூக்கள் அதிகமாகும். 


விவசாய ஆலோசகர்,
93807 55629.

கருத்துரையிடுக Disqus

 
Top