0

நவீன விஞ்ஞான கருவிகளைக்கொண்டு நிலத்தடி நீர் வளத்தை அறியும் திட்டம் ஒன்றை எல்லா மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது, என்று நமது செய்திளாரிடம் கூறினார் சங்கிலி. மேலும் இது பற்றி விரிவாக கூறியதாவது

இந்த நவீன முறையில், நிலத்தை பௌதீக முறையில் ஆய்வு செய்து,நிலத்தடி நீர்வளம் எவ்வாறு உள்ளதென கணக்கிடுகிறோம்

நாங்கள் நிலத்தை ஆய்வு செயது அந்த இடத்தில் உள்ள பாறை வகைகள், அதன் அமைப்புகள், கடினத்தன்மை, பாறைகளில் உள்ள பிளவுகள் போன்றவற்றைக் கணிக்கிறோம் மேலும், எங்களின் ஆய்வார் அருகில் உள்ள குளம், ஆறு, வாய்க்கால் இவற்றின் அமைப்பை ஆராய்ந்து நீர் சுரக்கும் வாய்ப்புகள் பற்றி ஆராய்கிறார்.
அதன் பின் நில பௌதீக முறையில் ஆய்வை மேற்கொள்ளுகிறார்.

நில பௌதீக ஆய்விற்கு "ரெஸிஸ்டிவிடி மீட்டர்" என்ற கருவி உபயோகப்படுத்தப்படுகிறது. பூமியில் ஒரு நேர்கோட்டில் நான்கு கடப்பாறைகள் குறிப்பிட்ட இடைவெளியில் அடிக்கப்படுகிறது. இவைகள் ஒயர் மூலம் ரெஸிஸ்டிவிடி மீட்டருடன் இணைக்கப்படுகின்றன. சி1, சி2 எனக் குறிப்பிட்டுள்ள இரண்டு எலக்ட்ரோடு மூலம் குறிப்பிட்ட அளவு மின்சாரம் பூமிக்குள் செலுத்தப்படுகிறது. அவ்வாறு செலுத்தப்படும் மின்சாரம் மின் அலைகளாக பாறைகளின் வழியாக, பாறையின் தன்மை, அதன் அமைப்பு, பாறைகளிலுள்ள பிளவுகள் இவற்றின் தன்மைக்கேற்ப பாய்ந்து மின் எதிர்ப்பு ஏற்படுத்துகின்றது.

இவ்வாறு ஏற்படும் மாறுதல் பாறைக்குள் அடிக்கப்பட்டுள்ள பி1, பி2 என்று எலக்ரோடுகள் மூலம் ரெஸிஸ்டிவிடி மீட்டரில் அளவிடப்படுகிறது. பி1,பி2 எலட்ரோடுகளுக்கு இடைப்பட்டுள்ள தூரம் எவ்வளவோ அந்த அளவு ஆழத்தில் உள்ள படிவங்கள், பாறைகளின் மின் எதிர்ப்பு சக்தி ஆகியவை கணக்கிடப்படுகிறது. இந்த இடைவெளி தூரம் 2 மீட்டர் முதல் 50 மீட்டர் வரை வேறுபடும்.

இந்த நவீன முறையைப் பயன்படுத்துவதன் மூலம், நிலத்திற்கு அடியில் உள்ள படிவப் பாறை, கடினப் பாறை, மணல் பகுதி ஆகியவற்றை அறிய முடியும். மேலும் நிலத்திற்கடியில் எத்தனை அடி ஆழத்தில் நீர் கிடைக்கும் என்பதையும் நீரின் தன்மையையும் ஓரளவு கணிக்க இயலும்.

மேற்படி முறை கடந்த பத்தாண்டு காலத்திற்கு மேலாக இந்த நவீன முறையில் மேற்கொள்ளப்பட்டு திறந்த வெளிக் கிணறுகள், ஆழ்துளைக்கிணறுகள் ஆகியவை அமைக்க தேர்வு செய்யப்பட்டு, கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆய்வுக்குப் பிறகு மேற்கொள்ளும் கணக்கின்படி நிலத்தடி நீர் வளம் இல்லாமல் இருக்கும் நிலத்தைப் பற்றியும் அந்தந்த விவசாயிகளுக்கு விளக்கி கூறப்பட்டு கிணறு அமைப்பதால் பயன் ஏற்படாது என்பதைக் கூறி பணமும், காலமும் விரயமாவது தடுக்கப்பட்டு வருகின்றது.

மேற்படி பணிகள் மிகவும் வெற்றிகரமாக வருவதால் விவசாயிகள் மற்றுமில்லாமல் அனைவரும் மிகவும் ஆர்வமுடன் இக்கருவிகளைப் பயன்படுத்த விரும்புவது மிகவும் வரவேற்க்கதக்கது என்று கூறினார். மேலும் தொடர்புக்கு +91 93616 86786 , +91 95853 79966 என்ற எண்ணை அழையுங்கள்.

கருத்துரையிடுக Disqus

 
Top