0
 Image result for விடுகதைகள்
1. சுற்றும்போது மட்டும் சுகம் தருவாள். அது என்ன?
2. செய்தி வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே. அது என்ன?
3. கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன், பள்ளநீரைக் கண்டு பதைபதைக்கிறான். அது என்ன?
4. கலர்ப்பூ கொண்டைக்காரி, காலையில் எழுப்பிவிடுவாள். அது என்ன?
5. கந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அது என்ன?
6. கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ எது?
7. கறுப்புக் காகம் ஓடிப்போச்சு, வெள்ளைக் காகம் நிற்குது. அது என்ன?
8. காலாறும் கப்பற்கால் கண்ணிரண்டும் கீரை விதை. அது என்ன?
9. மழையோடு வருகின்ற மஞ்சள் புறாவை வெட்டினால் ஒரு சொட்டு இரத்தம் வராது. அது என்ன?
10. உருவத்தில் சிறியவன். உழைப்பில் பெரியவன். அவன் யார்?

கருத்துரையிடுக Disqus

 
Top