இது எதனால் நிகழ்கிறது? பூமி தனக்கென்று ஒரு அச்சில் தன்னைத் தானே சுழல்கிறதல்லவா? அதற்க்கு 24 மணி நேரமும் ஆகிறது என நமக்குத் தெரியும். பூமத்திய ரேகையில் அதன் சுற்றளவு அதிகம், அப்படியே வடக்காகவோ தெற்காகவோகாகவோ துருவப் பகுதிகளை நோக்கி செல்லும்போது இந்தச் சுற்றளவு குறைந்து கொண்டே சென்று துருவத்தில் பூஜ்ஜியமாகிறது. ஆனால் பூமியைப் பொறுத்தவரை ஒரு சுற்றை சுற்றி முடிக்க எல்லா வட்டத்துக்கும் அதே 24 மணி நேரம்தான் பிடிக்கும்.
![]() |
பூமத்திய ரேகையிலிருந்து மேலேயோ [வட துருவம்], கீழேயோ [தென் துருவம்] 20,40,80 டிகிரி என செல்லச் செல்ல வட்டம் சிறிதாகிக் கொண்டே போகிறது. |
ராட்டினங்கள் சுற்றும் போது வெளியே உள்ள பொம்மைகள் வேகமாகவும், உள்ளே செல்லச் செல்ல மெதுவாகவும் சுற்றுவதைப் பார்த்திருப்பீர்கள். அதே மாதிரி அதிக சுற்றளவுள்ள பூமத்திய ரேகைப் பகுதியில் ஒரு பொருள் இருந்தால் அதி வேகமாகவும், அதிலிருந்து விலகிச் செல்ல செல்ல இடத்துக்கு தக்காவாறு குறைந்த வேகத்திலும் பயணிக்கும். துருவப் பகுதிக்குப் போய்விட்டால் ராட்டினத்தின் குடை மேல் வைக்கப் பட்ட பொம்மை மாதிரி தன்னைத் தானே சுற்ற வேண்டியதுதான்!!
நீங்கள் பூமத்திய ரேகை பகுதியில் இருந்து வட பகுதியில் இருப்பதாகக் கொள்வோம். நீங்கள் பூமியின் சுழற்சி காரணமாக ஒரு குறிப்பிட்ட வேகத்தில் சென்று கொண்டிருப்பீர்கள், அப்படியே காற்றில் எழும்பி மேலும் வடக்கு நோக்கிச் செல்வதாகக் கொள்வோம். வடக்கே செல்லச் செல்ல வேகம் குறைவு, வேகமான வண்டி மெதுவான வண்டியை முந்திச் செல்வது போல நீங்கள் பூமி சுற்றும் திசையில் சற்று முந்திச் செல்வீர்கள், எனவே நீங்கள் நேர்க்கோட்டில் பயணிக்க முயற்ச்சித்தாலும் வலதுபக்கம் நகர்ந்துவிடுவீர்கள். அதே போல அதே பகுதியில் எதிர் திசையில் வந்தால் இடது புறம் திருப்பப் படுவீர்கள். இதே விளைவுதான் நீங்கள் புனலில் ஊற்றப்படும் மண்ணெண்ணெயிலும் வலஞ்சுழியாக திரவம் சுற்றுவதாகப் பார்க்கிறீர்கள். மிதக்கும் நீர் மூலக்கூறுகள் புனலில் வடக்கு நோக்கி நகர்ந்தால் வலது புறமாகவும், வடக்கே இருந்து தெற்கு நோக்கி நகர்ந்தால் இடது புறமாகவும் திரும்பும், மொத்தத்தில் வலஞ்சுழியாக சுற்றிக் கொண்டே வடியும். நிலநடுக் கோட்டில் இருந்து தென்பகுதியில் இதே காரணத்தால் இடஞ்சுழியாகச் சுழன்ற வண்ணம் வடியும். நடுக்கோட்டி ப்ச்........ எந்தப் பக்கமும் சுழலாது!!