கனவு நனவாகி விட்டது என்று சிலர் சொல்வது வழக்கம். அதன்படி கனவில் ஒரு சில பொருட்களைக் கண்டால் அதன் பலனாக பணம், பொருட் சேர்க்கை,தனலாபம் வந்து சேரும். ஆனால் இந்தக் கனவை மட்டும் பிறரிடம் சொல்லக்கூடாது.


வலது உள்ளங்கை அரித்தாலும் பணம் வரும் என்று சொல் வழக்கு உள்ளது.

1.அரசன்,யானை,குதிரை,பசு எருது,தங்கம்-தனலாபம்,குழந்தைப்பேறு உண் டாகும்.

2.நாக சர்ப்பம் வலது தோளில் ஏறினால்-பொன், பித்ரலாபத்துடன் வரும்.

3.பாம்பு தேள் கண்டால்-பணம் எவ்வழியிலாவது கிடைக்கும்.

4.தாமரை இலையில் பாயசம் சாப்பிடுவது போலக்கனவு வந்தால் பெரிய பணக்காரனாக பிரபுவாக ஆவார்கள். கனவு தானாக வரவேண்டும். நீங்களாக மேற் சொன்னதை நினைத்துக் கொண்டு படுக்கக்கூடாது.

5.சுமங்கலியையும் வயது முதிர்ந்த சுவாசினியையும் கனவில் கண்டால் மந்திரி பதவி, அரசியல் பதவி தேடி வரும். விஷயம் தெரிந்தவர்கள் இதை தெரிந்து கொண்டு வீட்டில் விழா நடக்கும் போது  முதலில் சுவாசினி வழிபாட்டைச் செய்தார்கள்.

இதன் பலனாக குபேர சம்பத்து பல ராஜவம் சத்தினருக்கு கிடைத்தது. ராஜராஜசோழன் வேத பண்டிதர்களைக் கொண்டு சுவாசினி பூஜையையும் , குபேர பூஜையையும் நடத்திய இடம் வராகி சன்னதியில் தான். இது தஞ்சை பெரியகோவிலிëல் உள்ளது.

 
Top