0
Image result for beer meme tamil

“வகை வகையாய் வார்த்தை தேடி உன்னை வர்ணிக்க ஆசை இல்லை..

“காலம் முழுதும் வாழ்கையை வர்ணித்து உன்னோடு வாழ ஆசை”

“கவிஞனாய் கவிதை எழுதி உன்னிடம் காதல் சொல்ல ஆசை இல்லை..


“கவிதை உன்னை கலைஞனாய் ரசிக்கும் ரசிகனாய் உன்னோடு ரசித்து வாழ ஆசை”
------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதற்கு முந்தைய பதிவு "டிங்கு டைரி - 31 "பியரும் புலம்பலுமாக"


குமார்: "ஒண்ணும் இல்ல. நேரா போய் அவகிட்ட பேசிடு. முடிஞ்சா காலில் விழுந்துடு"

நான் : "அதெல்லாம் பேசி பாத்துட்டேன். பேசுனா, ஐ லவ் யூனு  சொல்றா"

குமார்: "ஹா ஹா ஹா" விழுந்து விழுந்து சிரித்தபடி நான் அவனை முறைக்க அவன் கொஞ்சம் சிரிப்பை அடக்கிக்கொண்டு . "மச்சி, உன்னையெல்லாம் ஒரு பொண்ணு திரும்பி பாக்குறதே பெரிய விஷயம். ஒருத்தி உன்கிட்ட வந்து ஐ லவ் யூ சொன்னா, அதுவே எட்டாவது உலக அதிசயம்".

நான் : "த்தூ.. சனியனே, உன்கிட்ட போய் கேட்டேன் பாரு..என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு"

குமார்: "என்ன?"

நான் : "அவள‌ நேர்ல போய் பார்த்து, 'அசிங்க அசிங்கமா திட்டுவேன்.. இல்லன்னா நான் தம், தண்ணி எல்லாம் அடிப்பேன், ஏற்கெனவே ஒரு பொண்ண லவ் பண்றேன், நாங்க அடுத்த வாரம் ஓடிப் போக போறோம்' இப்படி ஏதாவது சொல்லி அவளை டென்ஷன் ஆக்கி ஒரு பயம் உண்டாக்குவேன், எப்படி நம்ம ஐடியா?"

பெருமிதமாக அவனைப் பார்த்தேன். இரண்டாவது பியர் கடைசி சிப்பாய் குடித்துவிட்டு

குமார்: "குட் ஐடியா" என ஏளனமாகச் சொன்னான்.

நான் : "ச்சே, இப்ப நான் இருக்கிற டென்ஷன்ல, அவ மட்டும் என் கையில சிக்குனா, அவளை ஆஃப்பாயில் போட்ருவேன்"

குமார்: "மச்சி, வாமிட் வந்தா பாத்ரூம் போயிடு".

நான் : "அவளுக்கு உடம்பெல்லாம் கொழுப்புடா. அதான் அன்னைக்கு என்னை லஞ்ச்க்கு கூப்பிட்டுப் போய் கலாசிட்டா.. 

குமார்: அவளுக்கு ஒரு நாள் இருக்குனு சொல்லுறையா ?

எனக்கு பியர் உச்சி மண்டையில் டான்ஸ் ஆடியது.

நான் : "இல்ல. ஐ மீன், அவ ஓவர் திமிர் பிடிச்சவன்னு சொல்ல வந்தேன்"

காலிங் பெல் அடித்தது.

நான் : "டேய், எல்லாத்தையும் எடுத்து உள்ள வை. ஹவுஸ் ஓனர் வந்துட்டாங்கன்னு நினைக்கிறேன். அமாவாசை, கிருத்திகைன்னா பாயாசம், வடைன்னு ஏதாவது இம்சை பண்றதே இவங்களுக்கு வேலையா போச்சு"

30 செகண்டில் இடத்தைக்ளீன் பண்ணிவிட்டோம். நான் கதவை பாதி திறந்தேன்.

யாரையும் காணவில்லை. முழுதாகத் திறந்தேன். முழுதாக நின்றிருந்தாள்.

நான் :"பிரியாயாயா!!!!"

அடுத்த பகுதி  டிங்கு டைரி 33 "ஜீன்ஸ் போட்ட மஹாலெட்சுமி! " அடுத்த பகுதி தொடரும்.........  

முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30]


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



"கடலைக் கண்டவர்கள் இன்னும் அதன் ஆழத்தை காணவில்லை...." # பெண்கள் மனது

கருத்துரையிடுக Disqus

 
Top