0

கணவனுக்கு தன் மணைவி தான் இரண்டாவது தாய்...!! ஆனால் மணைவிக்கு கணவன் தான் முதலாவது குழந்தை..!!!
----------------------------------------------------------------------------------------------------------------------

இதற்கு முந்தைய பகுதி  டிங்கு டைரி - 75 குட்டையை கிளறிய புஸ்பா!!!

உஷா : போதையில் இருந்தா என்ன பேசுறேன்னு கூடவா தெரியாது, ரகு சாபுடுராரானு கேளுடா.

நான் : நா புல்லா  சாப்டேனே

உஷா : நா கேக்குறது சாப்பாட்ட

நான் : ம்ம் ம்ம் னு தள்ளாடியவாறு நின்றேன்

உஷா : சாப்பாட்டுக்கும் தன்னிக்கும் கூடவா வித்தியாசம் தெரியல

சிறிது வினாடியில் ஒரு குமட்டல்.. வாந்தியாக நான் சாப்பிட்டது எல்லாம் வந்தது

போதை தலைக்கேற உஷாவை பார்த்து சொன்னேன்ல சாப்டேன்னு சொல்லி மட்டையானேன்

எல்லாம் என் தலை எழுத்து என தன தலையில் அடித்துவாறு கை தாங்கலாக்க என்னை படுக்கயரக்கு கூட்டிச்செல்ல

நான் : பாத்துடி என் கை வலிக்க போகுது .. எவன்டா வீட்ட இவ்ளோ பெருசா கட்டிப்போட்டவன் ரகுவை பார்த்தது செல்லக்குட்டி படிக்கிரியா செல்லம் .... நீயவுது பாசாகுடா உங்க அம்மாமாதிரி பெயில் ஆய்டாத

ரகு தன் கையால் தலையில் அடித்தவாறு படிக்க தொடங்கினான்

மறுநாள் காலை..... காலைல எழுந்ததும் என் கைகள் உஷாவை தேடியது அவள் இல்லை

அப்பா சாமி செம மப்புடா நைட்டு வேற சட்டதானே போட்டிருந்தேன்.. நைட்டு ரொம்ப அல்பர பண்ணியிருப்பேன் போல. சும்மாவே பேச மாட்டா இன்னிக்கு நான் காலிதான்

பக்கத்தில் இருந்த டேபிள் மேல இரு கடிதத்தை பார்த்ததும் எனக்கு தூக்கிப் போட்டது

ஐயையோ லெட்டரா..

ஒரு பயத்துடன் ..

எதுவும் தப்ப இருக்கக்கூடாது சாமி என என் எல்லாக் குலதெய்வங்கள் பக்கத்துக்கு சர்ச் அல்லாவையும் சேத்து வேண்டினேன்

ஏய் புருசா எழுந்துட்டியா டா,

உனக்குப் பிடித்தமாதிரி டீ போட்டு இந்த டேபிள்ள வெச்சிருக்கிறேன், அப்பறோம் உனக்கு பிடிச்ச பிறேக்பாஸ்ட் ரெடிபண்ணி உள்ள டேபில இருக்கு வீட்டுக்குக் கொஞ்சம் பொருள் வாங்க வேண்டியிருக்கு அதுனாலதான் காலைலேயே மார்கெட் போய்ட்டேன், சீக்கிரமா வந்துடுறேன்..

அப்பறம்

பேசாம இருந்ததுக்கு ரொம்ப ரொம்ப சாரி

ஐ லவ்யு டா புருசா.

இவ்ளோ சந்தோசமா எழுதியிருக்குரா அப்படி நேத்து என்னதான் நடந்துச்சு..

நான் : ஏய் ரகு.. ரகு எங்கடா இருக்குற ..

தன் முகத்தைத் திருப்பிக்கொண்டு சோபாவில் உட்கார்ந்து கொண்டிருந்தான்.

ரகுக்கே இவ்ளோ கோவம்னா அப்போ அவ்ளோ அட்டூழியம் பண்ணியிருக்கிறேன் போல அனா உஷா லெட்டர் மட்டும் எப்படி!!!!

நான் : டேய் ரகு சாரிடா

ரகு : பேசாத போ

நான் : என்னடா ரகு அப்பாதானானட

ரகு : எனக்கேவா.. சரி சொல்லுறேன்.. நேத்து நைட்டு புல்லா குட்டுச்சுட்டு வந்தியா.. அப்பரம் வாந்தி எடுத்தையா.. ஒரே நாத்தம். ஒய்.. அம்மா பாவம் பா.. உன்ன பத்திரமா பெட்ல படுக்கவசு உன் சட்ட பட்டன கலுடுனாங்க அப்போ நீ “ஏய் தொடாதடி யாரடி நீ.. இங்க பார் எனக்குக் கல்யாணம் ஆய்டுச்சு.. எனக்கு மனைவி இருக்குறா இங்க இருந்து போ”னு நீ சொல்ல அம்மா அழுதுட்டு வெளிய வந்துச்சு. 

காலைல அம்மா எதோ ஒரு லெட்டர் எழுதுச்சு.. அத நீ பாத்தா என்கிட்ட வந்து ஏதாவது கேப்பனும்னு நான் எதுவும் சொள்ளக்கூடாதுன்னு சொல்லுச்சு.. உன்ன பாத்தா பாவமா இருக்கு அதுதான் சொன்னேன். 

அப்பா இனிமேல் உன்பேரும் அம்மா பெரும் ரகு இல்லைல

நான் : “””

ரகு : அப்பா அம்மா என்ன வாங்க போயிருக்கைங்கனு தெரியுமா வஞ்சரமீனு, அப்பா உன்ன ரொம்ப பிடிக்கும் ஆனா நீ குடிக்கிறது சுத்தமா பிடிக்காது

நான் : செல்லம் அப்பா இனிமேல் குடிக்க மாட்டேன் பிராமிஸ்.

ரகு : தேங்க்ஸ் பா.. 

மாதங்கள் ஓடின நாட்கள் செல்ல செல்ல என் மாற்றங்களைக் கொஞ்சம் கவனித்தால் உஷா. இவர் இப்படியிருக்க மாட்டாரே... ஏதோ மிஸ்ஸாகுதே என மனதில் நினைத்தபடியே எனக்கு காஃபி கொண்டுவந்தாள்.

" நல்லவனா இருந்தாலும் தப்புதான்  !!!! அடுத்த பகுதி தொடரும்.........     

முந்தைய டைரிகள் [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] [10] [11] [12] [13] [14] [15] [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] [30] [31] [32] [33] [34] [35] [36] [37] [38] [39] [40] [41] [42] [43] [44] [45] [46] [47] [48] [49] [50] [51] [52] [53] [54] [55] [56[57] [58] [59] [60] [61] [62] [63] [64] [65] [66] [67] [68] [69] [70] [71] [72] [73] [74]

[75] முந்தைய பதிவு || அடுத்த பதிவு [77]
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துரையிடுக Disqus

 
Top